Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பீகார் தேர்தலில் மோசடி நடந்தது உண்மை தான்! ஆனால்.." உடைத்து பேசிய பிரசாந்த் கிஷோர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சி படுதோல்வியை அடைந்த நிலையில், இது தொடர்பாக அவர் மனம் திறந்துள்ளார். தேர்தலில் மோசடி நடந்தது உண்மை தான் என்ற அவர், இதற்கான ஆதாரம் தன்னிடம் இல்லை என்றாலும் மோசடி நடந்தது வெளிப்படையாகவே தெரிவதாகக் குற்றஞ்சாட்டினார்.

பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது. நிதிஷ் குமார் 10வது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். மறுபுறம் இந்தியா கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. அதேபோல பீகாரில் தனித்துக் களமிறங்கிய ஜன் சூராஜ் கட்சியும் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது.

Prashant Kishor Alleges Bihar Poll Rigging via EVMs No Proof Blames NDA for Jan Suraaj Defeat

பிரசாந்த் கிஷோர்

அக்கட்சி வேட்பாளர்களால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. பல தொகுதிகளில் அவர்கள் டெபாசிட்டை கூட இழந்தனர். இதற்கிடையே பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து ஜன் சூராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். தேர்தல்களில் முறைகேடு நடந்தது உண்மை தான் என்று சொன்ன அவர், இருப்பினும் இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டார்.

மோசடி

இது தொடர்பாக ஆங்கில ஊடகமான இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "பீகார் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. சில அசைக்க முடியாத சக்திகள் இதன் பின்னால் உள்ளன. மக்களுக்கு அதிகம் தெரியாத கட்சிகள் கூட பல லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகக் கூட புகார்கள் எழுந்துள்ளன. என்னிடம் இதற்கான ஆதாரம் இல்லை. ஆனால், பல விஷயங்கள் சரியாக இல்லை. வெளிப்படையாகப் பார்த்தால் ஏதோ தவறு நடந்திருக்கிறது. ஆனால், என்னவென்று தெரியவில்லை" என்றார்.

மேலும் தேர்தல் நடக்கும்போதே என்டிஏ அரசு பல ஆயிரம் பெண் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகவும் அதுவும் தேர்தல் முடிவுகளைப் பெரியளவில் பாதித்ததாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வாக்குப்பதிவு நாள் வரை.. பெண்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

ரூ.2 லட்சம் ரொக்கம்

மொத்தமாக இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றும் இந்த பத்தாயிரம் முதல் தவணை என்றும் மக்களிடம் சொன்னார்கள். மேலும், என்டிஏவுக்கும் நிதிஷுக்கும் வாக்களித்தால் மட்டுமே மீதிப் பணம் கிடைக்கும் என்று சொன்னார்கள். இதை நம்பி பல லட்சம் பேர் வாக்களித்தனர். பீகார் அல்லது நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் இதுபோல தேர்தலுக்கு முன்பு 50,000 பெண்களுக்கு அரசே நேரடியாகப் பணம் கொடுத்தது இல்லை.

மேலும் தேர்தல் நெருங்கும்போது பலரும் ஜன் சூராஜ் வெல்லாது என நினைத்தனர். எங்களுக்கு வாக்களித்து நாங்கள் வெற்றி பெறாவிட்டால், அது லாலு அரசு மீண்டும் வரக் காரணமாக இருக்கும் என நினைத்தனர். இதனால் எங்களுக்கு வரவேண்டிய பெருவாரியான வாக்குகள் என்டிஏ பக்கம் போனது" என்றார்.

அரசியல் வாழ்க்கை ஓவர்?

பிரசாந்த் கிஷோரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகச் சிலர் சொல்வது குறித்த கேள்விக்கு, "நான் வெற்றி பெற்றபோது கைதட்டியவர்கள் இவர்கள்தான். என் அரசியல் வாழ்க்கை குறித்து முடிவெடுக்க வேண்டியது நான்தான். மீண்டும் வெற்றி பெற்றால், அவர்கள் மீண்டும் கைதட்டுவார்கள். அவர்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள், நான் எனது செய்கிறேன். என்னை குறை சொல்பவர்கள்தான் என்னைப் பற்றி அதிகம் அறிய ஆர்வமாக இருக்கிறார்கள். எனது கதை இன்னும் முடிவுக்கு வரவில்லை" என்றார்.

பீகார் தேர்தலில் 243 தொகுதிகளில் பிரசாந்த் கிஷோர் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டது. இருப்பினும், ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.. வெறும் 2 முதல் 3 சதவீத வாக்குகளையே பிரசாந்த் கிஷோர் கட்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+