Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதை பாஜகவே எதிர்பார்க்கல.. மோடி காலில் நிதிஷ் குமார்? இது பீகாருக்கே கேவலம்.. பிரசாந்த் கிஷோர் நறுக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மாநில மக்களுக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் என்று பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவது என்பது நிதிஷ்குமாருக்கு புதியதில்லை.. கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்தே மாநில சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொண்டவர்..

Narendra Modi Nitish kumar Prashant kishor Bihar

கூட்டணி: கடந்த தேர்தலின்போது, மெஜாரிட்டி பெறாததால், பாஜகவின் தயவை நாடியே, ஆட்சியை பிடித்திருந்தார்.. ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் எதையுமே நிதிஷுக்கு பாஜக அப்போது தரவில்லை..

இதையடுத்து கூட்டணியில் விழுந்த விரிசல், நாளடைவில் பிளவை தந்துவிட்டது.. பாஜகவுக்கு எதிரான கூட்டணியை காங்கிரஸ், இடதுசாரிகளின் தயவுடன் உருவாக்கினார்.. ஆனாலும், அங்கேயும் அதிருப்தி எழுந்து, இந்தியா கூட்டணியிலிருந்தும் விலகி, மறுபடியும் பாஜக பக்கம் சாய்ந்துள்ளார் நிதிஷ். அத்துடன் ஒருபடிமேலே போய், பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து ஆசி பெற முயலும் அளவுக்கு, நிதிஷ்குமாரின் விசுவாசம் வளர்ந்துள்ளது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

நிதிஷ்குமார்: கடந்த ஏப்ரல் மாதம் பீகாரில் உள்ள நவாதா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் மோடியின் கால்களை தொட்டு வணங்க முயன்றார்.. கால்களில் விழ வந்த நிதிஷ்குமாரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தினார்... இந்த சம்பவத் தேசிய அளவில் கவனத்தை பெற்றிருந்தது.

இந்நிலையில், பாகல்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அரசியல் உத்தி வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பங்கேற்றிருந்தார்.. அப்போது அவர் சொன்னதாவது:

"நிதிஷ்குமாருடன் கடந்த காலத்தில் பணியாற்றிய நான், இப்போது அவரை ஏன் விமர்சிக்கிறீர்கள்? என்று என்னிடம் மக்கள் கேட்கிறார்கள்.. அப்போது அவர் வித்தியாசமான மனிதராக திகழ்ந்தார்.. அப்போது அவரது மனசாட்சியை, விற்பனைக்கு வைக்கவில்லை... ஒரு மாநிலத்தின் தலைவராக இருந்தவர்.. அந்தக் காலங்களில் அவர் சுயமரியாதையுடன் இருந்தார். ஆனால்,

பீகார் அவமானம்: ஒரு மாநிலத்தின் தலைவர் என்பவர் மாநிலத்தின் மக்களின் பெருமையாகத் திகழ்பவர். ஆனால் நிதிஷ் குமார், பிரதமர் மோடியின் கால்களை தொட்டு, பீகாருக்கே பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்.

மோடி மறுபடியும் ஆட்சிக்கு வருவதற்கு நிதிஷ் குமார் முக்கியப் பங்கு வகிக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.. ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தன்னுடைய செல்வாக்கை எவ்வாறு பயன்படுத்துகிறார்? மாநிலத்தின் நன்மைக்காக, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தவில்லை. 2025 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக ஆதரவுடன் வெற்றி பெற்று, தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக பிரதமர் மோடியின் கால்களில் விழுகிறார்" என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

விமர்சனம்: பிரசாந்த் கிஷோரை பொறுத்தவரை, கடந்த 2022ம் ஆண்டே, அரசியலில் பிரவேசிக்க இருப்பதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மறைமுகமாக பதிவிட்டிருந்தார்..

அதுமட்டுமல்லாமல், பீகார் முழுவதும் 3,000 கி.மீ. நடைப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அறிவித்தார். அந்தவகையில், எப்படியும் வரப்போகும் 2025 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடப் போகிறார் என்ற கருத்துகள் வட்டமிட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், நிதிஷ்குமாரை பகிரங்கமாகவே விமர்சித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது.

அதிர்வலை: அதுமட்டுமல்ல, எப்படியும் இந்தியா கூட்டணியில் இணைந்து, பாஜகவுக்கு "செக்" வைப்பார் என்று பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், திடீரென பாஜக பக்கம் சாய்ந்ததுடன், பிரதமரின் காலை பிடித்து தன்னுடைய விசுவாசத்தை காட்டும் அளவுக்கு நிதிஷ்குமார் வந்துவிட்டாரே என்ற, தேசிய அளவிலான அதிர்வலை இன்னமும் அரசியல் களத்தில் நிலவி வருகிறதாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+