"ரூ.14,000 கோடி முறைகேடு.." பீகாரில் பாஜக கூட்டணி வென்றது இப்படி தான்.. பிரசாந்த் கிஷோர் பகீர்
பாட்னா: பீகார் தேர்தலில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சி கணிசமான அளவுக்கு வாக்குகளைப் பெற்றாலும் கூட அவர்களால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. இதற்கிடையே பீகார் தேர்தலில் சுமார் 14,000 கோடி ரூபாய் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே இதுபோல நடந்ததில்லை என்றும் அவர் சாடினார்.
பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் என்டிஏ கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அங்கு மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 202 தொகுதிகளில் என்டிஏ வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியால் வெறும் 35 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.

பிரசாந்த் கிஷோர்
இதற்கிடையே ஜன் சூராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ஆளும்தரப்பு மீது சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். உலக வங்கியிடம் இருந்து பெற்ற ரூ.14,000 கோடி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக விமர்சித்தார். வளர்ச்சிப் பணிகளுக்காகப் பெறப்பட்ட நிதிச் சலுகைகள் மற்றும் இலவசங்களுக்காகத் திசை திருப்பப்பட்டதாகச் சாடினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிக்கப்படும் வரை, 40,000 கோடி ரூபாய் நிதீஷ் குமார் அரசால் செலவிடப்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளை அரசுப் பணத்தின் மூலம் வாங்க இந்தச் செலவு செய்யப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இது மிகப் பெரியளவில் நடந்தது. உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 14,000 கோடி ரூபாய்க் கடன் சலுகைகள் மற்றும் இலவசங்களுக்காகத் திசை திருப்பப்பட்டுள்ளது.
மாபெரும் முறைகேடு
பீகாரில் தேர்தல் நடக்கும்போதே பெண்களுக்குத் தலா 10,000 ரூபாய் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. கேட்டால் முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் என்றார்கள். தேர்தல் நடத்தை விதிகள் இருந்தபோதிலும், வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்பு வரை மக்களுக்குப் பணம் கிடைத்துக் கொண்டே இருந்தது. நாட்டிலேயே இதுபோல நடப்பது இதுதான் முதல்முறை. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்களின் வாக்குகளைப் பெற இதுவே போதுமானதாக இருந்தது.
இதுபோல அரசு நிதியைச் செலவிட்டு என்டிஏ கூட்டணி மக்கள் வாக்குகளை வாங்கியது. ஒருவேளை அதைச் செய்யாமல் இருந்திருந்தால் என்டிஏ கூட்டணி அழிந்திருக்கும்.
வாக்குகள் மாறியது
முதியோர் உதவித் தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்படும் என ஜன் சூராஜ் கட்சி சொன்ன பிறகே இவை எல்லாம் நடந்தது. ஆர்ஜேடி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிடும் என்ற அச்சமும் மக்களுக்கு இருந்தது. ஆர்ஜேடி ஆட்சியில் சட்ட ஒழுங்கு மோசமாக இருந்தது என நான் சொல்லவில்லை. ஆனால், அந்த அச்சம் மக்களிடையே இருந்தது. மீண்டும் அதுபோன்ற நிலை வரக்கூடாது என மக்கள் நினைத்தனர்.. இதனால் தான் ஜன் சூராஜ் வாக்காளர்களும் கூட கணிசமானோர் என்டிஏ பக்கம் சாய்ந்தனர். இதுவும் ஒரு காரணம்" என்றார்.
பீகார்
பீகாரில் ஜான் சூராஜ் கட்சி யார் உடனும் கூட்டணி வைக்காமல் தனித்துக் களமிறங்கியது. அக்கட்சி கணிசமான வாக்குகளை வாங்கிய போதிலும், அக்கட்சியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி மட்டுமே 5 இடங்களில் வென்றிருந்தது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications