"ஒடிஸாவின் மோடி" பிரதாப் சந்திர சாரங்கி அமைச்சரவையிலிருந்து நீக்கம்!
டெல்லி: ஒடிஸாவின் மோடி என அழைக்கப்பட்ட பிரதாப் சந்திர சாரங்கி தற்போது அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவையில் இரு ஆண்டுகள் கழித்து விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இதில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க மோடி முடிவு செய்துள்ளார்.
அதன்படி ஒவ்வொரு அமைச்சராக நீக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒடிஸாவின் பாலசோர் எம்பி பிரதாப் சந்திர சாரங்கி நீக்கப்பட்டுள்ளார்.

எத்தனை பேர்
இதையடுத்து இவர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடியை தொடர்ந்து மொத்தம் 57 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களில் 24 பேர் கேபினட் அமைச்சர்கள், 24 பேர் இணை அமைச்சர்கள், 9 பேர் தனி பொறுப்புடன் கொண்டவர்கள் ஆவர்.

ஒடிஸா எம்பி
இந்த பட்டியலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஒடிஸா எம்பி பிரதாப் சந்திர சாரங்கி. எளியவராக அறியப்படும் இவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை மோடி கொடுத்தார். அதாவது கால்நடைத் துறை, மீன்வளம் மற்றும் சிறு குறு நிறுவனங்களின் இணையமைச்சர் பதவியை வகித்து வந்தார்.

ஜோல்னா பை
மண் சுவர் கொண்ட ஒரு குடிசை, ஒரு ஜோல்னா பை, துருப்பிடித்த சைக்கிள்- இவைதான் சாரங்கிக்கி சொந்தம். ஒடிஸாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு எம்பி இவர். பாலசோர் தொகுதியில் போட்டியிட்ட சாரங்கிக்கு எதிராக முதல்வர் நவீன் பட்நாயக் பிரச்சாரம் செய்தும் ஒன்றும் ஆகவில்லை.

சாரங்கி
பாலசோரில் சாரங்கியை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். அத்தனை பணக்கார வேட்பாளர்களை தோற்கடித்து கெத்தாக வென்றார் சாரங்கி. இவரது வெற்றிக்கு பரிசாக மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது விரிவாக்கத்திற்காக பறிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications