PM Modi: அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி மூலம்.. மக்கள் சேமிப்பு பல மடங்கு அதிகரிக்கும்! பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: சமீபத்தில் ஜிஎஸ்டி வரியில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாற்றங்கள் நாளை முதல் அமல்படுத்தப்பட இருக்கும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன என்றும் புதிய ஜிஎஸ்டியால் மக்களின் சேமிப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி, தற்போது வரை 4 வகையாக பிரித்து வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவின் வரி, சர்வதேச பொருளாதார தாக்கம் உள்ளிட்டவை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. மட்டுமல்லாது ஜிஎஸ்டி-ஐ எளிமைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் அதிகரித்தன.

இந்நிலையில் 5, 12, 18, 28 என நான்கு வகையாக பிரிக்கப்பட்டு இருந்த ஜிஎஸ்டி வரி, இனி வரும் காலங்களில் 5, 18 என இரண்டு வகையாக மட்டுமே வசூலிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பு பரவலாக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதனால் பல பொருட்களின் விலைகள் குறையும். இந்த அறிவிப்பை தீபாவளி பரிசு என்று பிரதமர் மோடி பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் 5, 12, 18, 28 என நான்கு வகையாக பிரிக்கப்பட்டு இருந்த ஜிஎஸ்டி வரி, இனி வரும் காலங்களில் 5, 18 என இரண்டு வகையாக மட்டுமே வசூலிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பு பரவலாக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதனால் பல பொருட்களின் விலைகள் குறையும். இந்த அறிவிப்பை தீபாவளி பரிசு என்று பிரதமர் மோடி பாராட்டியிருந்தார்.
இந்தச் சூழலில் தான் பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன என்ற பிரதமர் மோடி, புதிய ஜிஎஸ்டியால் மக்களின் சேமிப்புகள் அதிகரிக்கும், விரும்பியதை வாங்கலாம் என்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பால் கோடி கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications