டெல்லி அரசு வீடு... காலி செய்தார் பிரியாங்கா காந்தி... அடுத்து எங்கே போவார்?
டெல்லி: டெல்லியில் மத்திய அரசால் தனக்கு அளிக்கப்பட்டு இருந்த வீட்டை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காலி செய்தார். கடந்தாண்டு அவருக்கு சிறப்பு பாதுகாப்புப் படை வாபஸ் பெற்ற பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட வீட்டையையும் காலி செய்யுமாறு மத்திய ஹவுசிங் மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் டெல்லியில் 35, லோதி எஸ்டேட்டில் இருந்த வீட்டை பிரியங்கா காந்தி காலி செய்தார். மத்திய ஹவுசிங் மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் வீட்டை ஜூலை ஒன்றாம் தேதி காலி செய்யுமாறு கூறியிருந்தது. 01/08/2020 தேதிக்கு மேல் தங்கினால், பழுதுபார்ப்பு கட்டணம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பின்னர் அவர் குடியிருந்த வீடு பாஜக எம்.பி.யும், செய்தி தொடர்பாளருமான அனில் பலுனிக்கு ஒதுக்கப்பட்டது. இசட் ப்ளஸ் பாதுகாப்பு இல்லாதவர்களுக்கு வீடு ஒதுக்க வேண்டியதில்லை என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தால் மட்டுமே ஒதுக்க வேண்டும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

கடந்த 1997ஆம் ஆண்டில் பிரியங்கா காந்திக்கு டெல்லியில் அரசு வீடு ஒதுக்கப்பட்டது. தற்போது டெல்லி அரசு வீட்டை காலி செய்திருக்கும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தனது உறவினரின் கவுல் நிவாஸ் வீட்டுக்கு பிரியங்கா செல்ல இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். வரும் 2022ல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் இனி அதிகமாக அவர் அங்குதான் தங்குவார் என்று கூறப்படுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications