மீண்டும் வேறு ரூபத்தில் வரும் பப்ஜி.. ரூ.750 கோடி முதலீட்டில் இந்திய ஸ்டைலில் தனி கேம்!
டெல்லி: ரூ.750 கோடி முதலீட்டில் இந்தியர்களுக்காக மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட பப்ஜி கேம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Recommended Video
இந்தியாவில் பப்ஜி கேம் மிகவும் பிரபலமான விளையாட்டாக இருந்தது. குறுகிய காலத்தில் பல லட்சம் இளைஞர்களை கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் அதிகம் விளையாடப்படும் விளையாட்டாக விளங்கியது.
இளைஞர்கள் பலர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி அதுவே வாழ்க்கை என்ற அளவுக்கு மாறினர். பப்ஜி விளையாட்டு பின்னாளில் பல உயிர்களை காவு வாங்கியது.உயிரைவிட்டனர்.
வேலூர்: ஓடாதே நில்லு.. சுட்டுடுவோம்.. பிரபல ரவுடியை துப்பாக்கி முனையில் பிடித்த போலீஸ்
செப்டம்பரில் தடை
லடாக் எல்லையில் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து. நீண்ட ஆலோசனைக்குப் பின் பப்ஜி விளையாட்டையும் இந்தியாவில் மத்திய அரசு கடந்த செப்டம்பரில் தடை செய்தது. கலாச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில் மாறியதால் தடை செய்யப்பட்டது.
பப்ஜி மொபைல் இந்தியா
இந்நிலையில் பப்ஜி கேம் மீண்டும் பல்வேறு அம்சங்களுடன் 'பப்ஜி மொபைல் இந்தியா' என்ற பெயரில் விளையாட்டு என் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
கதாபாத்திரங்கள் மாற்றம்
பழைய பப்ஜி விளையாட்டில் நம் நாட்டின் கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையில் அரை நிர்வாண கதாப்பாத்திரங்கள் இடம்பிடித்திருந்து. இந்த புதிய விளையாட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய பயனாளிகளுக்கு ஏற்றவகையில் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியர்களுக்கு வேலை
பப்ஜி விளையாட்டு அலுவலகம் இந்தியாவில் அமைக்கப்பட உள்ளதாகவும், இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்ஜி கேம் இந்தியாவில்மீண்டும் வரப்போவதை அறிந்து இளைஞர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தியாவிற்கு பொருத்தமான கதாபாத்திரங்களுடன் கேம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இளைஞர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.