எல்லையில் இந்திய ராணுவம் ருத்ர தாண்டவம்.. 12 மணி நேரம் தொடர் தாக்குதல்.. தீவிரவாத தளபதி சுட்டுக்கொலை
Recommended Video

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில், புல்வாமா தாக்குதலின் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி கம்ரான் சுட்டுக் கொல்லப்பட்டான்.
சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பொறுப்பேற்ற, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் ஆசாருக்கு நெருக்கமானவன், கம்ரான் என்பதால், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையில் இது முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
காஷ்மீரிலுள்ள இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து தங்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பது மற்றும் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவன் கம்ரான்.

இரு முக்கிய தீவிரவாதிகள்
பாதுகாப்பு படையினர் கடந்த 12 மணி நேரமாக எல்லையில் நடத்திய தேடுதல் வேட்டை மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் கம்ரான் கொல்லப்பட்டதோடு அவனது கூட்டாளியான மற்றொரு தீவிரவாதி காஜி ரஷீத் என்பவனும் கொல்லப்பட்டான். காஜி ரஷீத், ஆப்கன் நாட்டைச் சேர்ந்தவனாகும். ஐஇடி வெடிகுண்டுகளை தயாரிப்பதில் இவன் பெயர்பெற்றவன்.

ராணுவ வீரர்கள்
இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தின் 4 வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். பொது மக்களில் ஒருவரும் பலியாகியுள்ளார். துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற பகுதி என்பது, பிப்ரவரி 14ம் தேதி சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது தீவிரவாதி தற்கொலைத்தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலுள்ள ஏரியாவாகும்.

தேடுதல் வேட்டை
கம்ரானை கடந்த பல ஆண்டுகளாகவே ராணுவம் தேடி வந்தது. ஆனால், கிராமம் கிராமமாக இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு இளைஞர்களை தீவிரவாதிகள் பக்கம் இழுக்கும் வேலையில் கம்ரான் ஈடுபட்டு வந்ததால், பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான், இப்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.

12 மணி நேரம் ஆவேசம்
இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து 12 மணி நேரங்களாக காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அதிரடி வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான், தொடர்ந்து 4வது நாளாக, ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமலில் நீடித்து வருகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications