விவசாயிகள் போராட்டத்தை சீக்கிரம் முடிங்க... அமித்ஷாவிடம் அமரிந்தர் சிங் வலியுறுத்தல்!
புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்.
விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாப் மாநில பொருளாதாரமும், நாட்டின் பாதுகாப்பும் பாதிக்கப்படுவதால் இந்த பிரச்சினையைத் விரைவில் தீர்க்கும்படி உள்துறை மந்திரியிடம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 8வது நாளாக தொடர்ந்தது. மத்திய அரசு, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார்.
விவசாயிகளின் போராட்ட நிலைமை குறித்து உள்துறை மந்திரியிடம் விளக்கிய அமரீந்தர் சிங் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த சந்திப்புக்கு பிறகு அமரீந்தர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் நான் தீர்க்க எதுவும் இல்லை. வேளாண் சட்டங்களுக்கு உள்துறை மந்திரியிடம் எதிர்ப்பு தெரிவித்தேன். விவசாயிகளின் போராட்டம் பஞ்சாப் மாநிலத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து உள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்பும் பாதிக்கும் அபாயம் உள்ளதால் இந்த பிரச்சினையைத் விரைவில் தீர்க்கும்படி அவரிடம் வலியுறுத்தினேன். இவ்வாறு அமரீந்தர் சிங் கூறினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications