2 கல்லில் 3 மாங்காய்.. செம சந்தோசத்தில் பாஜக தலைகள்.. ஒரே நாளில் அடுத்தடுத்து குட் நியூஸ்
பாஜக கட்சிக்கும் மத்திய அரசுக்கும் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று நல்ல செய்திகள் கிடைத்து இருக்கிறது.
Recommended Video
டெல்லி: பாஜக கட்சிக்கும் மத்திய அரசுக்கும் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று நல்ல செய்திகள் கிடைத்து இருக்கிறது.
அயோத்தி வழக்கில் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது ஒரே வார இடைவெளியில் மூன்று வழக்குகளில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் மீதான வழக்கு, ரபேல் வழக்கு, ராகுல் காந்திக்கு எதிரான தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று மூன்று வழக்கிலும் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை
அதன்படி சபரிமலை வழக்கில் முக்கியமான திருப்பம் நிகழ்ந்து இருக்கிறது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்வது தவறு என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை. ஆனால் இந்த வழக்கை 7 நீதிபதிகளின் பெஞ்சிற்கு நீதிபதிகள் மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கில் ஒரு வகையில் வெற்றி
அதனால் சபரிமலை வழக்கின் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் நடக்கும். இது ஒரு வகையில் கேரளா பாஜகவிற்கு வெற்றி என்று கூறப்படுகிறது. மீண்டும் வழக்கில் விசாரணை நடப்பதால் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். இது பாஜகவிற்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ராகுல் வழக்கு
பிரதமர் மோடியை திருடர் என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வைத்த கருத்திற்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீதிமன்றம் கண்டிப்பு
இது பாஜக கட்சிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பெரிய கட்சியில் முக்கிய தலைவராக இருப்பவர் கவனமாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதை வைத்து இப்போதே பாஜகவினர் ராகுல் காந்தியை விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.

ரபேல் ஒப்பந்தம்
அதேபோல் மிக முக்கியமாக ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கின் மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் எந்த தவறும் நிகழவில்லை, அதனால் எப்ஐஆர் அவசியமில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். ரபேல் வழக்கில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை இல்லை, என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மூன்று விஷயம்
இப்படி ஒரே நாளில் மூன்று விஷயங்களில் பாஜக மகிழ்ச்சி அடையும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அயோத்தி வழக்கில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதுவும் பாஜகவிற்கு பெரிய மகிழ்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications