சீன ஆக்கிரமிப்பு.. ராகுல் காந்தி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு! அமளி காரணமாக மக்களவை ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்திய எல்லையில் சீன படைகள் ஊடுருவி இருப்பதாக கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
மத்திய அரசின் வரவுசெலவுத் திட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தின்போது, மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளதாகக் குற்றம்சாட்டினார். அரசின் மீது கேள்விகளை எழுப்பிய அவரது இந்தப் பேச்சு அவையில் பெரும் அமளிக்கு வழிவகுத்தது.

ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக மறுத்தார். தமது கூற்றுக்குத் தேவையான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியை அவர் வலியுறுத்தினார். அவையில் இரு தலைவர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.
பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராகுல் காந்தியின் இக்குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து, தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். சீன அத்துமீறல் குறித்த இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தி வெளிவராத ஒரு புத்தகத்தை மேற்கோளிட்டு பேசியிருப்பதாகவும், எனவே அவையில் அவருக்கு பேச அனுமதி மறுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளி காரணமாக, மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications