ஒரு வருஷமாக மக்களிடம் கருத்து கேட்டு உருவாக்கிய தேர்தல் அறிக்கை.. ராகுல் காந்தி பெருமிதம்
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் 54 பக்க தேர்தல் அறிக்கை பூட்டிய அறையில் உட்கார்ந்து கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். சுமார் 54 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ராகுல் காந்தி பேசினார்.
அவர் பேசுகையில் சுமார் ஓராண்டாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை ப.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தயார் செய்தனர்.

அறிவுறுத்தல்
மக்களின் கருத்தை கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க கூறியிருந்தேன். ஒரு பொய் கூட தேர்தல் அறிக்கையில் இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தினேன்.

முக்கியத்துவம்
தினமும் பிரதமர் பல பொய்களை பேசி வருகிறார், நாங்களும் பொய் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் அறிக்கை என்பது மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இதில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

வறுமை
செயல்படுத்தக் கூடிய திட்டங்கள் மட்டுமே தேர்தல் அறிக்கையில் இருக்கும். தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலை கொண்டு வரப்படும், விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், 2030-க்குள் இந்தியாவில் வறுமை ஒழிக்கப்படும்.

அறிக்கை
ஜிஎஸ்டியில் உள்ள கடுமையான அம்சங்கள் நீக்கப்படும். அரசு துறையில் காலியாக உள்ள 22 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும், தேச விரோத தடை சட்டம் நீக்கப்படும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த அறிக்கையில் காணப்படுகிறது என்றார் ராகுல் காந்தி.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications