படுதோல்விக்கு பிறகும் கட்சி பதவிகளில் நீடிக்கும் மூத்த தலைவர்கள்... கொந்தளிப்பில் ராகுல் காந்தி
டெல்லி: லோக்சபா தேர்தல் படுதோல்விக்குப் பின்னரும் காங்கிரஸ் கட்சிப் பதவிகளில் பல மூத்த தலைவர்கள் நீடிப்பதால் கடும் கொந்தளிப்பில் இருக்கிறாராம் ராகுல் காந்தி.
லோக்சபா தேர்தலில் இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து படு தோல்வியைத் தழுவியது, அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.
வயநாடு தொகுதியில் வெற்றி
ராகுல் ராஜினாமா
அதேநேரத்தில் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அமோக வெற்றியைப் பெற்றார். இருப்பினும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

ராகுல் ராஜினாமா
அதேநேரத்தில் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அமோக வெற்றியைப் பெற்றார். இருப்பினும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

பதவியில் மூத்த தலைவர்கள்
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் தமது ராஜினாமா முடிவை அறிவித்தார் ராகுல் காந்தி. ஆனால் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் காந்தி தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கொந்தளிப்பில் ராகுல்
இருப்பினும் தமது ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகிறார். இதனிடையே தம்மை சந்தித்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம், தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்கிறேன். ஆனால் மூத்த தலைவர்கள் பலரும் கட்சிப் பதவிகளிலேயே இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ராஜினாமா செய்த சீனியர்
இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதே நேரத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் ராஜினாமா செய்ய வேண்டாம் என கூறியிருக்கிறார் ராகுல். இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவரும் காங்கிரஸின் மனித உரிமைகள் பிரிவு தலைவருமான விவேக் தன்ஹா தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ராகுல் காந்தியின் கோபத்தை தணிக்கும் வகையில் அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் பலரும் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்யக் கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications