படுதோல்விக்கு பிறகும் கட்சி பதவிகளில் நீடிக்கும் மூத்த தலைவர்கள்... கொந்தளிப்பில் ராகுல் காந்தி
டெல்லி: லோக்சபா தேர்தல் படுதோல்விக்குப் பின்னரும் காங்கிரஸ் கட்சிப் பதவிகளில் பல மூத்த தலைவர்கள் நீடிப்பதால் கடும் கொந்தளிப்பில் இருக்கிறாராம் ராகுல் காந்தி.
லோக்சபா தேர்தலில் இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து படு தோல்வியைத் தழுவியது, அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.
வயநாடு தொகுதியில் வெற்றி
ராகுல் ராஜினாமா
அதேநேரத்தில் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அமோக வெற்றியைப் பெற்றார். இருப்பினும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

ராகுல் ராஜினாமா
அதேநேரத்தில் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அமோக வெற்றியைப் பெற்றார். இருப்பினும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

பதவியில் மூத்த தலைவர்கள்
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் தமது ராஜினாமா முடிவை அறிவித்தார் ராகுல் காந்தி. ஆனால் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் காந்தி தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கொந்தளிப்பில் ராகுல்
இருப்பினும் தமது ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகிறார். இதனிடையே தம்மை சந்தித்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம், தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்கிறேன். ஆனால் மூத்த தலைவர்கள் பலரும் கட்சிப் பதவிகளிலேயே இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ராஜினாமா செய்த சீனியர்
இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதே நேரத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் ராஜினாமா செய்ய வேண்டாம் என கூறியிருக்கிறார் ராகுல். இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவரும் காங்கிரஸின் மனித உரிமைகள் பிரிவு தலைவருமான விவேக் தன்ஹா தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ராகுல் காந்தியின் கோபத்தை தணிக்கும் வகையில் அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் பலரும் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்யக் கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications