3 வருஷமா உறங்கிய காங்கிரஸ்..சீண்டிவிட்ட பாஜக..புதுரத்தம் பாய்ச்சின மாதிரி நாடு முழுவதும் போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கண்ணுக்கு எட்டிய தொலைவில் காங்கிரஸே இல்லை.. என்ற பாஜகவின் ஏகடியங்களுக்கு பளார், பொளேர் என செயலில் பதிலடி காட்டிக் கொண்டிருக்கிறது அந்த கட்சி. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் புனிதப் பணியை செய்திருக்கிறது பாஜக என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

2014, 2019 லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் எதிர்காலம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியானது. 2019 லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். கடந்த 3 ஆண்டுகளாக அந்த கட்சிக்கான தலைவர் ஒருவர் நியமிக்கப்படவே இல்லை.

அடுத்தடுத்து நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தல்களில் பரிதாபமான தோல்விகள்தான் கிடைத்தன காங்கிரஸுக்கு. இனி வரும் தேர்தல்களிலும் காங்கிரஸுக்கு இத்தகைய நிலைமைதான் என்பது சில நாட்களுக்கு முன்பு வரையிலான நிலைமை. ஆனால் இப்போது களநிலவரமே தலைகீழாகிக் கொண்டிருக்கிறது.

விசாரணையில் ராகுல்

விசாரணையில் ராகுல்

இந்த பின்னணியில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியை அமலாக்கப் பிரிவு விசாரிக்க அழைத்தது. எதைத் தின்றால் பித்தம் தெளியும்; எதைச் செய்தால் கட்சியை உயிர்ப்பிக்க முடியும் என தவியாய் தவித்த காங்கிரஸ் மேலிடத்துக்கு அமலாக்கப் பிரிவின் சம்மன் ஆகப் பெரும் ஆயுதமாகிப் போனது. ராகுல் காந்தியை விசாரிக்கும் நாளில் பிரமாண்ட சத்யாகிரகப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தது காங்கிரஸ். ராகுல் காந்தியும் விசாரணைக்கு சென்றார். காங்கிரஸும் அறிவித்தபடியே அமர்க்களமான போராட்டத்தை அரங்கேற்றியது.

விசாரணையில் ராகுல்

விசாரணையில் ராகுல்

இந்த பின்னணியில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியை அமலாக்கப் பிரிவு விசாரிக்க அழைத்தது. எதைத் தின்றால் பித்தம் தெளியும்; எதைச் செய்தால் கட்சியை உயிர்ப்பிக்க முடியும் என தவியாய் தவித்த காங்கிரஸ் மேலிடத்துக்கு அமலாக்கப் பிரிவின் சம்மன் ஆகப் பெரும் ஆயுதமாகிப் போனது. ராகுல் காந்தியை விசாரிக்கும் நாளில் பிரமாண்ட சத்யாகிரகப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தது காங்கிரஸ். ராகுல் காந்தியும் விசாரணைக்கு சென்றார். காங்கிரஸும் அறிவித்தபடியே அமர்க்களமான போராட்டத்தை அரங்கேற்றியது.

டெல்லி போலீஸ்

டெல்லி போலீஸ்

ஆனால் காட்சிகள் இத்துடன் முடியவில்லை. ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். காங்கிரஸும் ஓய்ந்துவிடவில்லை. முன்னைவிட படுஉக்கிரத்துடன் டெல்லி தெருக்களில் களமாடியது. இந்த களத்தின் முன்னணி வரிசையில் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் என பலரும் நின்றனர். மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்துக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் டெல்லி போலீஸ் நடுத்தெருவில் பந்தாடியது.

தொடருமா காங். போராட்டம்

தொடருமா காங். போராட்டம்

இப்போது ராகுல் காந்தியை மீண்டும் நாளை விசாரணைக்கு அழைத்திருக்கிறது அமலாக்கப்பிரிவு. இந்த ஒருநாள் இடைவெளியில் போராட்டத்துக்கு இடைவேளைவிடாமல் நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்தி இருக்கிறது. அதாவது டெல்லியில் மையம் கொண்டிருந்த காங்கிரஸ் போராட்ட புயல் இப்போது ஒவ்வொரு மாநிலமாக தாக்கி வருகிறது. இன்னொரு பக்கம் டெல்லியில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் மனு கொடுத்திருக்கின்றனர். இந்த விவகாரம் இப்போதைக்கு ஓயப் போவதில்லை. இந்த விவகாரத்தை வீச்சுடன் காங்கிரஸ் முன்னெடுத்தால் அதன் பாய்ச்சலை யாரும் தடுத்துவிட முடியாது என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+