மோடியும், அமித்ஷாவும் இளைஞர்கள் எதிர்காலத்தை அழித்துவிட்டனர் -ராகுல் காந்தி
டெல்லி: பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்வீட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், நாட்டை பிரித்து வெறுப்புணர்வுக்கு பின்னால் அவர்கள் ஒளிந்து கொள்வதாக புகார் கூறியிருக்கிறார்.
இளைஞர்களின் கோபத்தை பிரதமர் மோடியாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவாலும் எதிர்கொள்ள முடியவில்லை என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

எதிர்காலம்
இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; ''அன்பான இளைஞர்களே, மோடியும், அமித்ஷாவும் உங்கள் எதிர்காலத்தை சிதைத்துவிட்டார்கள். வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சரிவு ஆகிய விவகாரங்களில் உங்களின் கோபத்தை அவர்கள் இருவராலும் எதிர்கொள்ள முடியவில்லை''.

வெறுப்புணர்வு
''இளைஞர்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாததால், நாட்டை பிரித்து வெறுப்புணர்வுக்கு பின்னால் அவர்கள் இருவரும் ஒளிந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு சக இந்தியரிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் மட்டுமே அவர்களை நம்மால் வீழ்த்த முடியும்.''

வரவேற்பு
மேற்கண்ட இந்த வாசகத்தை ராகுல் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரவேற்று அதனை லைக் கொடுத்துள்ளனர். இளைஞர்களையும், மாணவர்களையும் காங்கிரஸ் போராட்டத்திற்கு அழைத்து அவர்களை தூண்டிவிடுவதாக பாஜக குற்றஞ்சாட்டி வந்த நிலையில் ராகுல் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.

பாஜக தரப்பு
பிரதமர் மோடி குறித்தும், உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும் ராகுல் நேரடியாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கக் கூடும் எனத் தெரிகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications