ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை 5 மடங்கு அதிகரிப்பு.. ஆடிப்போன பயணிகள்!
டெல்லி: சில ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை 50 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது பயணிகளுடன் ரயில் நிலையம் செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலத்திற்கு பிறகு இயக்கப்படும் ரயில்கள், சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் இயக்கப்படுகின்றன. வழக்கமான வழித்தடத்திற்கு முன்பைவிட இப்போது அதிகமாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
முதியோர் கட்டண சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் நீக்கப்பட்டு விட்டன. கேட்டால் அதிகம் பேர் பயணிக்கக் கூடாது என்பதால் கட்டணத்தை ஏற்றி விட்டோம் என்று காரணம் சொல்கிறது ரயில்வே துறை.

ரூ.50 கட்டணம்
இது ஒரு பக்கம் என்றால் பல ரயில் நிலையங்களில் ரயில் ஏற்றிவிட வருவோர் வாங்கக்கூடிய பிளாட்பார்ம் டிக்கெட் ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு பத்து ரூபாய் என்று இருந்த இந்த டிக்கெட் விலை 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் ரயிலில் கூட பயணித்து விடலாம் ஆனால் ஏற்றிவிட வருவோருக்கு இவ்வளவு பெரிய சுமை தேவையா என்ற கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

முக்கிய ரயில் நிலையங்கள்
மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல், தாதர் டெர்மினல் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களிலும் இதுபோல பிளாட்பாரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கும் கொரோனாவை காரணம் காட்டி உள்ளது ரயில்வேத்துறை. மும்பை டிவிஷனில் உள்ள 7 ரயில் நிலையங்களில் இப்படி கட்டணம் கூட்டப்பட்டுள்ளது.

கூட்டத்தை குறைக்கிறார்களாம்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அதிக மக்கள் கூட்டம் கூடும் சில ரயில் நிலையங்களில் மட்டுமே தற்காலிகமாக பிளாட்பார்ம் சீட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட குறுகிய கால நடவடிக்கையாக இது முன்பும் கையாளப்பட்ட யுக்திதான்.
பொது மக்கள் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே கூறியுள்ளது.

வசூல் வேட்டை
2020ம் ஆண்டு மார்ச் மாதம், ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது. பின்னர் இது விலக்கிக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பண்டிகைகளின் போதும் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் ரயில் நிலைய பிளாட்பார்ம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications