மழையால் கதை முடிந்தது.. உலக கோப்பைக்கு பெரிய அஞ்சலி.. வைரலாகும் புகைப்படம்
Recommended Video

டெல்லி: இங்கிலாந்தில் நடைபெறும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், மற்ற எல்லா டீமையும் விட, மழைதான் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. எந்த பிளேயர் நன்றாக விளையாடுகிறார்களோ, இல்லையோ மழை நின்று அடித்து விளையாடுகிறது.
ஆடிய போட்டிகளை விட, கைவிட்ட போட்டிகள் அதிகரிக்கும் சூழ்நிலை வந்து விட்டது. இதோ இன்று நாட்டிங்காம் நகரில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நடுவேயான போட்டி, மழையால் கைவிடப்பட்டு தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இந்தியா போன்ற ஒரு பெரிய அணிக்கு இப்படி மழையால், ஆட்டம் கைவிடப்படுவது, ஒரு இழப்புத்தான். சிறு அணிகள் வேண்டுமானால் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.. ஏதோ எப்படியாவது ஒரு புள்ளி கிடைத்ததே என்று!

இந்த நிலையில்தான், உலககோப்பை ஆன்மா சாந்தி அடையட்டும் என்று சொல்லி ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு முன்பாக அதில் பங்கேற்க கூடிய அனைத்து நாடுகளின் கேப்டன்களும் எடுத்துக்கொண்ட குரூப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி இருந்தது.
இப்போது அந்த கேப்டன்களை மழை வெள்ளம் மூழ்கடிப்பது போல சித்தரித்து இந்த படம் சுற்றி வருகிறது.
Not very far pic.twitter.com/gTRhsQWcZV
— Kishalaya (@kishalaya) June 13, 2019
இதேபோன்று முகத்தில் ஆக்சிஜன் முகமூடி அணிந்துகொண்டு தண்ணீருக்கு அடியில்தான் கிரிக்கெட் ஆட வேண்டுமா, என்றும் நெட்டிசன்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications