குடியரசு தலைவர் மாளிகையில் தமிழர் சிலை.. டெல்லியில் இன்று ராஜாஜி சிலை திறப்பு!
டெல்லி: டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று ராஜாஜி உட்சவ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறந்து வைக்கப்பட்டது. பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லூட்யன் சிலை அகற்றப்பட்ட இடத்தில் ராஜாஜிக்கு சிலை கட்டப்பட்ட நிலையில், அந்தச் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
டெல்லியில் மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதில் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள் மெல்ல விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதற்குப் பதிலாகப் புதிய கட்டுமானங்கள் நடந்து வருகிறது. ஏற்கனவே மத்திய அமைச்சரவைச் செயலகம், பிரதமா் அலுவலகம் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளன.

சிலை அகற்றம்
மேலும், அங்கு இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் சிலைகளும் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக இந்திய விடுதலைக்காகப் போராடியவர்களின் சிலைகள் நிறுவப்பட்டு வருகிறது. அதன்படி குடியரசுத்தலைவா் மாளிகையில் எட்வின் லூட்யன் அகற்றப்பட்டது. டெல்லியில் உள்ள முக்கிய அரசு கட்டிடங்களான குடியரசுத்தலைவா் மாளிகை, செளத் பிளாக், நாா்த் பிளாக் ஆகியவற்றை வடிவமைத்தவர் இந்த எட்வின் லூட்யன்! அவரது நினைவாகக் குடியரசு மாளிகையில் அவருக்குச் சிலை அமைக்கப்பட்ட நிலையில், அது அகற்றப்பட்டது.
ராஜாஜி சிலை
அந்த இடத்தில் தான் நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலான ராஜாஜிக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்தச் சிலையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.. குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு விழா நடைபெற்றது. நண்பகல் 12 மணியளவில் இந்தச் சிலை திறப்பு விழா நடைபெற்றது. குடியரசு தலைவர் ராஜாஜி சிலையை திறந்து வைத்தார். இந்தியாவின் கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர், மேற்கு வங்க கவர்னர், மெட்ராஸ் மாகாண முதல்வர் என்று பல்வேறு பதவிகளைக் கவனித்தவர் ராஜாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜாஜி சிலை திறப்பு குறித்த அறிவிப்பைப் பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று 'ராஜாஜி உட்சவ்' நடைபெறும் என்பதைப் பிரதமர் மோடி நேற்று தனது மன் கி பாத் உரையில் அறிவித்தார். காலனித்துவக் கால சின்னங்களைக் கைவிட்டு, இந்தியக் கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் ஆழமாக வேரூன்றிய அடையாளங்களை ஏற்றுக்கொள்வதே இதன் நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி அறிவிப்பு
பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "இதற்கு முன்பே நான் இது குறித்துப் பேசியுள்ளேன். நாம் அடிமைத்தன மனப்பான்மையிலிருந்து விடுதலைப் பெற வேண்டும்.. இன்று, அடிமைத்தனத்தின் சின்னங்களை விட்டுவிட்டு, இந்தியக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய சின்னங்களுக்கு நாடு மதிப்பளிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நமது குடியரசுத் தலைவர் மாளிகையும் இந்தத் திசையில் ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் 'ராஜாஜி உட்சவ்' கொண்டாடப்படும். இந்த நிகழ்வில், சி. ராஜகோபாலாச்சாரிஜியின் சிலை, குடியரசுத் தலைவர் மாளிகையின் புல்வெளிப் பகுதியில் திறந்து வைக்கப்படும். அவர் சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ஆவார்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு












Click it and Unblock the Notifications