Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜீவ் கொலை வழக்கு:பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்காததை ஏற்க முடியாது- உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல; இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி படுகொலையில் சர்வதேச சதித் தொடர்பு குறித்து சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்புக் குழு (Multi Disciplinary Monitoring Agency) இன்னமும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணை முடியும் வரை தங்களது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்புக் குழு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிக்கைகள் மீது பலமுறை அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

தமிழக அமைச்சரவை தீர்மானமும் ஆளுநரும்

தமிழக அமைச்சரவை தீர்மானமும் ஆளுநரும்

மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தது. இத்தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். பேரறிவாளன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீதான ஆளுநரின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் ஆளுநர் உரிய காலத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

ஆளுநரின் நிலைப்பாடு என்ன?

ஆளுநரின் நிலைப்பாடு என்ன?

ஆனால் சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் விசாரணை முடிவுக்காக ஆளுநர் காத்திருப்பதாக அந்த விசாரணையின் போது தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு சார்பில், 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மான விவரங்களை ஆளுநர் ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும் உரிய பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹைகோர்ட்டில் நளினி வழக்கு

ஹைகோர்ட்டில் நளினி வழக்கு

இதனிடையே தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ராஜீவ் கொலை வழக்கில் மற்றொரு ஆயுள் தண்டனை கைதியான நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இதே வழக்கில் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது டிசம்பர் 7-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது என குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கூடுதல் பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை?

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை?

இதனிடையே உச்சநீதிமன்றத்தில், பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது, பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல; இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் இனியும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+