ராஜீவ் கொலை வழக்கு:பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்காததை ஏற்க முடியாது- உச்சநீதிமன்றம்
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல; இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி படுகொலையில் சர்வதேச சதித் தொடர்பு குறித்து சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்புக் குழு (Multi Disciplinary Monitoring Agency) இன்னமும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணை முடியும் வரை தங்களது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்புக் குழு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிக்கைகள் மீது பலமுறை அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

தமிழக அமைச்சரவை தீர்மானமும் ஆளுநரும்
மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தது. இத்தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். பேரறிவாளன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீதான ஆளுநரின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் ஆளுநர் உரிய காலத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

ஆளுநரின் நிலைப்பாடு என்ன?
ஆனால் சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் விசாரணை முடிவுக்காக ஆளுநர் காத்திருப்பதாக அந்த விசாரணையின் போது தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு சார்பில், 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மான விவரங்களை ஆளுநர் ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும் உரிய பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹைகோர்ட்டில் நளினி வழக்கு
இதனிடையே தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ராஜீவ் கொலை வழக்கில் மற்றொரு ஆயுள் தண்டனை கைதியான நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இதே வழக்கில் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது டிசம்பர் 7-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது என குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கூடுதல் பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை?
இதனிடையே உச்சநீதிமன்றத்தில், பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது, பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல; இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் இனியும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications