ராஜீவ் காந்தி ஊழல் நம்பர் ஒன் தான்.. பிரதமரின் கருத்துக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு
டெல்லி: மறைந்த ராஜீவ் காந்தி ஊழல் செய்ததில் முதன்மையானவர் என்ற பிரதமரின் கருத்து சரி தான் என, சிரோமணி அகாலி தளம் கட்சி கருத்து தெரிவித்துள்ளது
தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய மோடி, ராஜீவ் காந்தி தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் ஊழலில் நம்பர் ஒன்னாக திகழ்ந்தாகவும், நாட்டின் மிகப்பெரிய கும்பல் தாக்குதல் குழுவின் தலைவராக இருந்ததாகவும் குற்றம் சுமத்தினார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில் ராஜீவ் காந்தி தொடர்பான பிரதமர் மோடியின் கருத்துக்கு, சிரோமணி அகாலி தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் மஞ்சிந்தர் சிங் சிர்ஸா வெளியிட்டுள்ள கருத்தில், ஊழலில் முதன்மையானவர் ராஜீவ் காந்தி என்று பிரதமர் நரேந்திர மோடி சரியாகவே கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மஞ்சிந்தர் சிங் நாட்டின் மிகப்பெரிய கும்பல் தாக்குதல் குழுவின் தலைவராக ராஜீவ் காந்தி விளங்கியதாக குற்றம் சுமத்தியுள்ளாார். ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு, கும்பல் தாக்குதல் நடத்திய உலகின் ஒரே பிரதமர் ராஜீவ் காந்தி தான் என குறிப்பிட்டுள்ளார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காங்கிரஸ் ஏன் ஆறுதல் தெரிவிக்கவில்லை என வினவிய அவர், திட்டமிட்டு சீக்கியர்களை கொன்று குவித்ததே காங்கிரஸ் தான் என்றார்.
சீக்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை ராஜீவ் காந்தி ஊக்குவித்ததோடு, அதில் ஈடுபட்டவர்களைப் பாதுகாத்தார். படுகொலையை நிகழ்த்தியவர்களுக்கு பரிசும் வழங்கினார்.
அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் ஏன் ஆறுதல் கூறவில்லை என்பதை, ராகுல் காந்தி தெளிவுப்படுத்த வேண்டும் என மஞ்சிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications