முதல்வர்களுடனான ஆலோசனையில், மோடியுடன், ராஜ்நாத்சிங், அமித் ஷா பங்கேற்பு.. பலத்த எதிர்பார்ப்பு
டெல்லி: கொரோனா பாதிப்பு தொடர்பாக இன்று, பிரதமர் நரேந்திர மோடி, 15 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிர்வாகிகளுடன் நடத்த உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக விவாதிப்பதற்காக நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக 21 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியிருந்தார்.

இன்று 15 மாநில முதல்வர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். இதில், தமிழகமும் ஒன்று. இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
சீனா மற்றும் இந்தியா இடையே எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவும் நிலையில் இவ்விரு முக்கிய அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மாநில முதல்வர்களுக்கு சீன நிலவரம் தொடர்பாக அவர்கள் விளக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதேநேரம் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் விளக்க வேண்டிய பொறுப்பிலுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர், 15 மாநில முதல்வர்களுக்கு மட்டும் எவ்வாறு விளக்கம் வழங்குவார் என்ற கேள்வியும் எழுகிறது. இருப்பினும் உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் எதற்காக இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications