அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை!
அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் பிரச்சனை குறித்து அவரிடம் ஆலோசனை செய்தார்.
டெல்லி: அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் பிரச்சனை குறித்து அவரிடம் ஆலோசனை செய்தார்.
கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்தியா பாகிஸ்தான் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின் இந்த வருடம் பிப்ரவரி மாதம் முழுக்க இந்தியா பாகிஸ்தான் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வந்தது.

தற்போது இந்த விரிசல் மேலும் அதிகம் ஆகியுள்ளது. 70 வருடங்களுக்கு மேலாக நீடித்து வந்த காஷ்மீர் பிரச்சனையில் கடந்த இரண்டு வாரம் முன் அதிரடி திருப்பம் நிகழ்ந்தது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதற்கு எதிராக பாகிஸ்தான் ஏற்கனவே ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரை சென்றுவிட்டது. இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்திலும் புகார் கொடுக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்தான் அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் பிரச்சனை குறித்து அவரிடம் ஆலோசனை செய்தார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ள மார்க் எஸ்பருக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முதலில் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின் பிராந்திய அமைதிக்கு அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும். இந்தியா அமெரிக்க இடையிலான உறவு எப்போதும் போல இருக்கும். காஷ்மீரில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்பது சந்தோசம்.
காஷ்மீர் சிறப்புப்பிரிவு நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அமெரிக்காவும் இதை ஆதரிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
-
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications