ராஜ்யசபா தேர்தல்: 11 மாநிலங்களை சேர்ந்த 41 பேர் போட்டியின்றி தேர்வு!
டெல்லி: ராஜ்யசபா தேர்தலில் 11 மாநிலங்களை சேர்ந்த 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் 15 மாநிலங்களிலிருந்து இருந்து காலியாகும் 57 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் வேட்புமனுக்களை திரும்ப பெற நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்திலிருந்து 11 பேரும் தமிழகத்தை சேர்ந்த 6 பேரும் பீகாரில் இருந்து 5 பேரும், ஆந்திராவிலிருந்து 4 பேரும், மத்திய பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநிலங்களிலிருந்து தலா 3 பேரும், சத்தீஸ்கர், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்க்கண்ட் மாநிலங்களிலிருந்து தலா 2 பேரும் உத்தரகண்ட் மாநிலத்திலிருந்து ஒருவரும் போட்டியிடுவதாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இவர்களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால் இவர்கள் 11 பேரும் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப சிதம்பரம், ராஜீவ் சுக்லா, பாஜகவை சேர்ந்த சுமித்ரா வால்மீகி, கவிதா படிதர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மிசா பாரதி, ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 4 மாவட்டங்களில் எந்த வேட்பாளரும் தனது வேட்புமனுவை திரும்ப பெறாததால் அந்த மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும்.
ராஜஸ்தானில் 4 இடங்கள், ஹரியானாவில் இரு இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உதய்பூரிலும் ராய்ப்பூரிலும் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
அது போல் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் போட்டியை தவிர்ப்பதற்காக தங்கள் கட்சி வேட்பாளரை வேட்புமனுவை வாபஸ் பெற நேற்று கட்சிகள் அழுத்தம் கொடுத்து வந்தன. ஆனாலும் யாரும் வாபஸ் பெறவில்லை. தற்போதைய நிலவரப்படி ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 93 ஆகவும் , காங்கிரஸ் கட்சிக்கு 32 ஆகவும் திமுகவுக்கு 11 ஆகவும் அதிமுகவுக்கு 4 ஆகவும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications