2 மாநிலங்கள்.. போட்டியே இன்றி தேர்வான ஐந்து பேர்.. ராஜ்யசபா செல்லும் புதிய எம்பிக்கள்!
டெல்லி: இன்று 19 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே 5 பேர் போட்டியின்றி இந்த தேர்தலில் வெற்றிபெற்று இருக்கிறார்கள்.
இன்று ராஜ்யசபா தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 8 மாநிலங்களில் உள்ள இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் 19 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

அதிகமாக ஆந்திர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் 4 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. அதேபோல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 3 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
கணக்குப்படி மொத்தம் 24 இடங்கள் காலியாக உள்ளது. ஆனால் இந்த இடங்கள் அனைத்திற்கும் தேர்தல் நடக்க வில்லை. இதில் 5 எம்பிக்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வானார்கள். இதனால் மீதம் இருக்கும் 19 இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
இந்த 5 எம்பிக்களின் வெற்றிக்குறித்து இன்று மாலை தேர்தல் முடிவுகள் வரும் போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். இந்த தேர்தலில் கர்நாடகாவில் 4 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் தேவ கவுடா கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவிற்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டார். இரண்டாவது முறையாக இவர் ராஜ்யசபா எம்பியாகி உள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியின்றி இந்த தேர்தலில் வெற்றிபெற்று இருக்கிறார். பாஜகவைச் சேர்ந்த அசோக் கஸ்தி மற்றும் இரானா கடாடி ஆகியோரும் போட்டியின்றி ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
அருணாசலப் பிரதேசத்தில் பாஜகவின் நாபம் ரெபியாவும் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இதனால் 19 எம்.பி. இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications