ராஜ்யசபா தொடங்கியது- திமுக எம்.பி.க்கள் 3 பேரும் தமிழில் பதவியேற்றனர்
டெல்லி: கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் இன்று பிற்பகல் 3 மணிக்கு ராஜ்யசபா நடவடிக்கைகள் தொடங்கின. தமிழக்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 திமுக எம்.பிக்கள் தமிழில் பதவியேற்றனர்.
கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் நாடாளுமன்றம் இன்று கூடியது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் காலையில் லோக்சபாவும் பிற்பகலிலும் ராஜ்யசபாவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று காலையில் லோக்சபா கூட்டம் நடைபெற்றது. பின்னர் பிற்பகல் 3 மணிக்கு ராஜ்யசபா கூட்டம் தொடங்கியது. ராஜ்யசபாவில் கேலரிகளிலும் எம்.பிக்களுக்கு சமூக இடைவெளியுடன் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

ராஜ்யசபாவில் முதலில் புதிய எம்.பிக்கள் பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்க திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் பதவியேற்றனர். இவர்கள் மூவரும் தமிழில் உறுதிமொழி ஏற்றனர்.












Click it and Unblock the Notifications