Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உபி தேர்தல்.. பாஜகவை படுதோல்வி அடைய செய்வதே எங்கள் ஒரே இலக்கு.. ராகேஷ் டிக்கைட் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜகவைத் தோற்கடிக்க விவசாயச் சங்கங்கள் நடவடிக்கை எடுக்கும் என்றும் தேர்தல் சமயத்தில் பிரசாரம் செய்ய முடியாத சூழலை ஏற்படுத்துவோம் என்றும் விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு கடந்தாண்டு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் ஓர் ஆண்டாகத் தொடர்ந்தது.

டிசம்பர் மாதம் நிலவிய கடும் குளிர், மார்ச், ஏப்ரல் சமயத்தில் நிலவிய கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி அறிவிப்பு

பல மாதங்களாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்த போதிலும், மத்திய அமைச்சர்களும் பலரும் விவசாய தலைவர்களும் வேளாண் சட்டம் கண்டிப்பாகத் திரும்பப் பெறப்படமாட்டாது எனத் தொடர்ந்து பேசி வந்தனர். இந்தச் சூழலில் குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது நாட்டு மக்களிடையே மன்னிப்பு கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார்.

விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் கோரிக்கை

இருப்பினும், நாடாளுமன்றத்தில் சட்டப்படி விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலை, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை

குறைந்தபட்ச ஆதரவு விலை

இந்நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட், "குறைந்தபட்ச ஆதரவு விலை எங்களுக்கு உதவியாக இருக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது எப்போதும் எங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. மத்திய அரசுடன் நடைபெற்ற 11 சுற்று பேச்சுவார்த்தையின் போதும் MSP குறித்து விவாதித்தோம். நாங்கள் அதில் பின்வாங்கப் போவதில்லை. சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தத் தேவையான பேச்சுவார்த்தைகளை அரசு தொடங்க வேண்டும்.

பாஜகவை தோற்கடிப்போம்

பாஜகவை தோற்கடிப்போம்

தேர்தல் நடத்தை விதிகள் தொடங்கும் முன்னர் எங்கள் கோரிக்கையை மத்திய அரசும், பிரதமர் மோடியும் நிறைவேற்ற வேண்டும். இப்போதுள்ள சூழலில் டெல்லி போராட்ட களத்தை விட்டு வெளியேறும் முடிவில் நாங்கள் இல்லை. உபி மக்களிடம் பாஜகவை தோற்கடிப்போம் என்ற கோஷத்தை எடுத்துச் செல்வோம். பாஜகவை தோற்கடிப்பதே விவசாயச் சங்கங்களின் ஒரே இலக்கு.

பிரசாரம் செய்ய முடியாத நிலை

பிரசாரம் செய்ய முடியாத நிலை

கிராமங்களில் அவர்களை மக்கள் புறக்கணிப்பதை நாங்கள் உறுதி செய்வோம். பிரசாரம் செய்ய முடியாத நிலையைக் கண்டிப்பாக ஏற்படுத்துவோம், ஏற்கனவே மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இந்த நிலை தான் உள்ளது. அதேபோல பாஜக எங்கெல்லாம் தோற்கும் நிலையில் உள்ளதோ, அங்கெல்லாம் ஓவைசி வருகிறார். விவசாயிகள் போராட்டம் இப்போது முடியாது. வரும் நவ. 29ஆம் தேதி டெல்லியை நோக்கி ஒரு டிராக்டர் பேரணி நடத்தவுள்ளோம். அதேபோல, நவ. 30ஆம் தேதி மற்றொரு போராட்டம் நடத்துவோம்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+