EMI கட்டாவிட்டால் இனி செல்போன்கள் முடக்கப்படும்.. ரிசர்வ் வங்கி கொண்டு வரும் புதிய ரூல்ஸ்.. ஷாக் தகவல்
டெல்லி: இனி செல்போன்களை இஎம்ஐ-யில் வாங்கிவிட்டு மாதாந்திர தவணை தொகையை செலுத்தாவிட்டால் அந்த செல்போன்களை முடக்கும் வகையிலான ரூல்ஸை ரிசர்வ் வங்கி கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது பலரும் வங்கி கடன் வாங்கி வீடு கட்டுகிறோம். அதன்பிறகு கார், பைக் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை இஎம்ஐ-யில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இஎம்ஐ-யில் பொருட்களை வாங்கும்போது முதலில் குறைந்த பணத்தை கொடுத்தால் போதும். அதன்பிறகு மாதம் மாதம் தவணை தொகையை செலுத்தினால் போதும்.

இதனால் பலரும் இஎம்ஐ-யை தேர்வு செய்கின்றனர். அதேபோல் பலரும் செல்போனையும் இஎம்ஐ -யில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பைக், கார் உள்ளிட்டவற்றுக்கான இஎம்ஐ-யை செலுத்தாவிட்டால் அந்த நிறுவனங்கள் அதனை எடுத்து சென்று விடுகின்றனர்.
அதேபோல் இஎம்ஐ-யில் செல்போன் வாங்கிவிட்டு மாதாந்திர தவணை தொகையை செலுத்தாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி ரூல்ஸ் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது செல்போன் கடனை திருப்பி செலுத்தாவிட்டால் அதன் இயக்கத்தை முடக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுபற்றி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நம் நாட்டின் நிதித்துறையில் வராக்கடன்களை குறைப்பதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி முன்னெடுக்க உள்ளதாம். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. நம் நாட்டை எடுத்து கொண்டால் செல்பான் உள்பட மின்னணு சாதனங்களில் 3ல் ஒரு பங்கு இஎம்ஐ மூலமாக வாங்கப்படுவதாக 2024ம் ஆண்டில் ‛ஹோம் கிரெடிட் ஃபைனான்ஸ்' நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக இஎம்ஐ கட்டாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களை லாக் செய்ய வேண்டாம் என்று கடந்த 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. அதாவது செல்போனை இஎம்ஐ-யில் வாங்கும்போது அதில் பிரத்யேகமாக ஒரு செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். அதன்பிறகு செல்போன் வாங்கியவர் இஎம்ஐ செலுத்தாவிட்டால் அந்த செயலி உதவியுடன் செல்போன் முடக்கப்பட்டு விடும். அதன்பிறகு இஎம்ஐ தொகையை செலுத்திய பிறகு மீண்டும் செல்போன் செயல்பாட்டுக்கு வரும்.
இத்தகைய முறை கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் இந்த முறையை கொண்டு வரும் வகையில் ரிசர்வ் வங்கி ரூல்ஸை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அமலுக்கு வரும் பட்சத்தில் செல்போனை இஎம்ஐ-யில் வாங்குவோர் அதனை முறையாக செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் செல்போன் முடங்குவது உறுதியாகி விடும். இதுபற்றி ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளரிடம் கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications