அதிகபட்சம் ஏப்ரல் வரைதான்.. பழைய 5, 10, 100 ரூபாய் நோட்டுக்களை நிறுத்துகிறது ரிசர்வ் வங்கி!
டெல்லி: பழைய 100 ரூபாய் நோட்டுக்களை மார்ச் அல்லது ஏப்ரல் மாத இறுதிக்குள், முழுமையாக விலக்கிக் கொள்ள உள்ளதாக ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பண மதிப்பிழப்புக்கு பிறகு, 2019ம் ஆண்டு புதியவகை 100 ரூபாய் நோட்டு புது வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ரூபாய்தான் தற்போது சுற்றி வருகிறது.
ஊதா கலரில் பார்க்கவே புதுமையாக உள்ளதுதான் புதிய வகை 100 ரூபாய் நோட்டுக்களாகும். எனவே, பழைய வகை ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திலிருந்து அகற்ற, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பணப் புழக்கம்
மாவட்ட வங்கிகள் இடையேயான ஆலோசனைக் கூட்டத்தில், மகேஷ் இதுபற்றி கூறுகையில், இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மார்ச், ஏப்ரல் மாத இறுதிக்குள், 100 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திலிருந்து அகற்றப்படும். புதிய ரூபாய் நோட்டுக்கள், புழக்கத்தில் இருக்கும்.

10 ரூபாய் நாணயம்
10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுக்களும் புழக்கத்தில் இருந்து அகற்றப்படுகிறது. 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. ஆனால் அதை வணிகர்களும், பொது மக்களும் இன்னும் முழுமையாக ஏற்கவில்லை என்று தெரிகிறது.

விழிப்புணர்வு தேவை
10 ரூபாய் நாணயத்தை, தயக்கமின்றி, பயன்படுத்தலாம். இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மகேஷ் அறிவிக்கவில்லை. அவற்றை வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஆர்பிஐ ஈடுபடக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நினைப்பு
தற்போது 10 ரூபாய் நாணயங்கள் டோல்கேட் போன்ற பகுதிகளில் தரப்படுகிறது, ஏற்கப்படுகிறது. வங்கிகளிலும் ஏற்கப்படுகிறது. ஆனால் வேறு எங்குமே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மக்கள் அச்சப்படுகிறார்கள். செல்லாத காசு என்று அவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இது தவறாகும்.
-
500 ரூபாய் நோட்டுகளுக்கு புதிய சிக்கல்? ஏடிஎம்களில் இனி 700 ரூபாய் தான் புழக்கத்திற்கு வருகிறதா -
உங்கள் வீட்டு லோன் இஎம்ஐ குறையுமா? ரிசர்வ் வங்கி முடிவு என்ன.. கீதா கோபிநாத் பேட்டி -
விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன? -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications