‛அரசியல் என்ட்ரி’.. ராஜ்யசபா எம்பியாகும் ரகுராம் ராஜன்? காங்கிரஸ் போடும் மாஸ்டர் பிளான்! பலிக்குமா?
டெல்லி: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனை ராஜ்யசபா உறுப்பினராக காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அவரை அரசியலுக்கு கொண்டு வர காங்கிரஸ் கட்சி காய்நகர்த்தி வருகிறதாம்.
நாடாளுமன்றத்தில் 2 சபைகள் உள்ளன. ஒன்று லோக்சபா (மக்களவை). இன்னொன்று ராஜ்யசபா (மாநிலங்களவை). இதில் லோக்சபா எம்பிக்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். மாறாக ராஜ்யசபா எம்பிக்கள் ஒவ்வொரு மாநிலங்களின் எம்எல்ஏக்கள் ஓட்டளித்து தேர்வு செய்யப்படுகின்றனர்.

ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் என்பது 6 ஆண்டுகளாகும். இந்நிலையில் தான் விரைவில் இந்தியாவில் 13 மாநிலங்களில் இருந்து தேர்வாகி இருந்த 56 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2 மற்றும் ஏப்ரல் 3ம் தேதிகளில் முடிவுக்கு வர உள்ளது.
அதன்படி உத்தர பிரதேசத்தில் 10, மகாராஷ்டிரா, பீகாரில் தலா 6, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 5, குஜராத், கர்நாடகாவில் தலா 4, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் தலா 3, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, இமாச்சல பிரதேசத்தில் தலா ஒன்று என மொத்தம் 56 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து அந்த 56 எம்பிக்களின் இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தலை பிப்ரவரி மாதம் 27 ம் தேதி நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கட்சிகள் சார்பில் ராஜ்யசபா எம்பிக்களை நியமனம் செய்வதற்கான பணிகளை தொடங்கி உள்ளன. இந்த ராஜ்யசபா எம்பி பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் 15ம் தேதி கடைசி நாளாகும்.
இதனால் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 12 மாநிலங்களில் உள்ள கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் காங்கிரஸ் சார்பில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை ராஜ்யசபா உறுப்பினராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இங்கிருந்து 4 பேர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளன.
இத்தகைய சூழலில் தான் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இல்லாவிட்டால் மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக அவர் தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. ரகுராம் ராஜன் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் மிகவும் நெருக்கமாக உள்ளார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று ஆதரவு வழங்கி இருந்தார். இந்நிலையில் தான் ரகுராம் ராஜன் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும் இதுபற்றி தற்போது வரை காங்கிரஸ் மற்றும் ரகுராம் ராஜன் சார்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இது தற்போது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் மூத்த காங்கிரஸ் தலைவரான முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்கின் ராஜ்யசபா பதவிக்காலம் என்பது விரைவில் முடிவுக்கு வர உள்ளது. வயது முதிர்வால் அவர் மீண்டும் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்படமாட்டார் என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தங்களது கட்சியில் சிறந்த பொருளாதார நிபுணர் தேவை என்பதை உணர்ந்து மன்மோகன் சிங்கிற்கு பதில் ரகுராம் ராஜனை ராஜ்யசபா எம்பியாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் முன்பு பெரிய சிக்கல் உள்ளது. அதாவது ரகுராம் ராஜன் இதற்கு முன்பு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று இருந்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் கட்சியில் இணைய போகிறீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது அவர் தனக்கு அரசியலில் உடன்பாடில்லை என தெரிவித்து இருந்தார். மேலும் சில நாட்களுக்கு முன்பு கூட அவர் அளித்த பேட்டியில், ‛‛நான் கல்வியாளராக இருக்கிறேன். அரசியல்வாதி கிடையாது'' என தெரிவித்து இருந்தார். இத்தகைய சூழலில் தான் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரகுராம் ராஜன் ராஜ்யசபா எம்பியாக அரசியலில் காங்கிரஸ் கட்சி மூலம் நுழைவாரா? இல்லையா? என்பதை அறிய இன்னும் சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications