பயணிகள் ரயில் சேவை நாளை மறுநாள் ஆரம்பம்.. பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்
டெல்லி: பயணிகள் ரயில் சேவை நாளை மறு நாள் முதல் ஆரம்பம் ஆக உள்ள நிலையில் பயணிகளில் ரயிலில் செல்ல ரயில்வே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கி ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மே 17 வரை நாடு முழுவதும் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.
எனினும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்பட மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது. இந்நிலையில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவரும் பணிகளில் அரசு இறங்கி உள்ளது.

ரயில் சேவை
நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை மே 12 முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் இருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 15 முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கும்
அகர்தலா, ஹவரா(கொல்கத்தா), பாட்னா, பிலாஸ்பூர், செகந்திராபாத் (ஹைதராபாத்), புவேனேஸ்வர், பெங்களூரு, ராஞ்சி, சென்னை, திருவனந்தபுரம், மடகோன் (கோவா)., மும்பை, அகமதாபாத், ஜம்முதாவி ஆகிய இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு வரும் மே 11ம்தேதி (நாளை) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

ஸ்கிரீன் செய்யப்படுவர்
இந்நிலையில் பயணிகள் இந்த ரயில்களில் செல்ல வேண்டும் எனில்கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
செல்லத்தக உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் (confirmed tickets) கொண்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் ரயிலில் புறப்படும் முன்பு ஸ்கிரீன் செய்து சோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக இருக்கும்,

ரயில் கட்டணம் எப்படி
மேலும் அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். இந்த சிறப்பு ரயில்கள் இந்த நேரத்தில் ஏசி பயிற்சியாளர்களுடன், குறைந்த நிறுத்தங்களுடன் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் ராஜதானி ரயிலுக்கு சமமாக இருக்கும். ரயில் அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் சரியான நேரத்தில் தனித்தனியாக வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications