ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்.. மத்திய அரசு தான் காரணமா? என்ன நடந்தது?
டெல்லி: முன்னணி செய்தி நிறுவனமான ராய்ட்டரிஸின் (Reuters) எக்ஸ் வலைதள பக்கம் நம் நாட்டில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 10க்கும் அதிகமான மொழிகளில் இந்த செய்தி நிறுவனம் உள்ளது. இந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உலக செய்திகள், பிசினஸ், சயின்ஸ், பொருளாதாரம் என்று தனித்தனியாக வலைதள பக்கங்களையும் வைத்துள்ளன.
அதேபோல் குறிப்பிட்ட நாடு, கண்டத்துக்கு என்று வலைதள பக்கங்களை ராய்ட்டர்ஸ் வைத்துள்ளன. இந்நிலையில் தான் நம் நாட்டில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் வலைதள பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த எக்ஸ் வலைதள பக்கம் செயல்படவில்லை.
ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள பக்கத்தை திறந்தால் Account Withheld.. @Reuters has been withheld in IN in Response to a leagal demand என்று மட்டுமே வருகிறது. அந்த பக்கத்தில் உள்ள பிற விவரங்கள் எதுவும் வரவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
இந்நிலையில் தான் ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கத்தை மத்திய அரசு பரிந்துரையின் பேரில் இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சில வேளைகளில் செய்தி நிறுவனங்கள் நம் நாட்டின் மீது அவதூறு பரப்பும் வகையில் செய்திகளையும், உண்மைக்கு புறம்பான செய்திகளையும் வெளியிடும். இப்படியான சூழலில் மத்திய அரசு அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளம், வலைதள பக்கங்களை முடக்கம் செய்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள பக்கத்தையும் மத்திய அரசு பரிந்துரையில் தான் எக்ஸ் நிறுவனம் முடக்கி உள்ளதாக தகவல்கள் பரவின.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், ‛‛ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள பக்கம் நம் நாட்டில் முடங்கி இருப்பதற்கு ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனை அல்லது வலைதளத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருக்கலாம்.
ஏனென்றால் . ராய்ட்டர்ஸ் கணக்கை முடக்க அரசு எக்ஸிடம் கேட்கவில்லை. ஏன் அவர்கள் அவ்வாறு செய்தார்கள் என்று எக்ஸிடம் கேட்டுள்ளோம். ராய்ட்டர்ஸின் பல கணக்குகள் இன்னும் இந்தியாவில் உள்ளன. இதன் மூலம் ராய்ட்டர்ஸ் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று அரசு விரும்புவது தெரிகிறது. இது எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப சிக்கலாகவோ அல்லது குழப்பமாகவோ இருக்கலாம்'' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் நம் நாட்டில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் மெயின் பக்கம் தான் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி நம் நாட்டில் ராய்ட்டர்ஸ் சீனா, ராய்ட்டர்ஸ் ஆசியா, ராய்ட்டர்ஸ் அறிவியல் செய்தி, ராய்ட்டர்ஸ் பிசினஸ் உள்ளிட்ட மற்ற எக்ஸ் பக்கங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications