Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1950ஐ விட மோசமான நிலைக்கு சென்ற இந்தியா! வெளியான ஷாக் ரிப்போர்ட்.. பிரச்சனைக்கு இதுதான் காரணம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் அதானி, அம்பானி, டாடா, பிர்லா, பார்தி மிட்டல் என ஒரு சிலருக்கு மட்டும் அதிக வருமானமும், மறுபுறம் நம்மை போன்ற சாதாரண மக்களுக்கு குறைந்த அளவு வருமானமும் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த வருமான சமத்துவமின்மை (income inequality) கடந்த 1950ல் இருந்ததை விட தற்போது மோசமடைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் பற்றிய மக்கள் ஆராய்ச்சி (PRICE) மற்றும் நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் ஆகிய அமைப்புகள் இணைந்து இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தன. ஆய்வின் முடிவில் இந்தியாவில் எல்லோருக்கும் சமமான வருமானம் கிடைக்கப்படுவதில்லை என்பதும், இந்த நிலை முன்னெப்போதை விடவும் இப்போது மோசமடைந்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

Economics Adani

வருமான சமத்துவமின்மை (income inequality) என்றால் என்ன?:

இதை புரிந்துக்கொள்வது ரொம்ப சிம்பிள். நீங்களும், நானும், நம்முடைய நண்பர்களும், உறவினர்களும் எல்லோருமே ஒரு நாளைக்கு குறைந்தது 9 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 12 மணி நேரம் வரை வேலை செய்கிறோம். வங்கி ஊழியராக, அரசு ஊழியராக, கூலி தொழிலாளியாக, ஒப்பந்த ஊழியராக, தனியார் ஊழியராக, சுய தொழில் செய்பவராக நம்மில் பலர் இருக்கிறோம். எல்லோரும் வேலை செய்யும் நேரம் ஒன்றுதான். ஆனால் ஏன் எல்லோருக்கும் ஊதியம் சமமாக வருவதில்லை?

சிலருக்கு மாதம் ரூ.10,000 சம்பளம் வரலாம், சிலர் ரூ.35,000 சம்பளம் பெறலாம். இன்னும் சிலர் ரூ.50,000 வரை கூட சம்பாதிக்கலாம். இந்த சம்பளத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் பிரச்சனையில்லை. இதெல்லாம் ரொம்ப சிறுசு. ஆனால் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். அது எப்படி சாத்தியமாகும்? அவருக்கு மட்டும் என்ன 4 கைகள், 8 கால்களா இருக்கிறது? இதைத்தான் வருமான சமத்துவமின்மை என்று அழைக்கிறோம்.

என்ன பிரச்சனை?:

சரிங்க இப்போ அதனால என்ன பிரச்சனை? என்று உங்களுக்கு தோன்றலாம். பிரச்சனை இருக்கு. சிலர் தேவையை விட அதிகமாகவும், பலருக்கு அன்றாட தேவைகளுக்கு கூட போதுமானதாகவும் வருமானம் கிடைக்காததால் வறுமை அதிகரிக்கிறது. வறுமைகள்தான் குற்றங்களை உருவாக்குகிறது. வறுமைதான் வன்முறையை உருவாக்குகிறது, ஆரோக்கியமற்ற போட்டியும், பொறாமையும் இப்படித்தான் பிறக்கிறது.

நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ள போதுமான பணம் கிடைப்பதில்லை, படிக்க பணம் இல்லை, சுயமரியாதையுடன் வாழ்வதற்கு பணம் இல்லை. இது எல்லாத்துக்கும் வருமான சமத்துவமின்மைதான் காரணம்.

ஆய்வு என்ன சொல்கிறது?:

வருமான சமத்துவம் குறித்து விளக்குவதற்கு 'ஜீனி'(Gini ratio) குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இந்த குறியீட்டின்படி '0' இருந்தால், எல்லோருக்கும் சமமான வருமானம் கிடைக்கிறது என்று அர்த்தம். இதுவே '1' என இருந்தால், யாருக்குமே சரியான சமமான வருமானம் கிடைக்கவில்லை என்று அர்த்தம். அதாவது வருமான சமத்துவமின்மை உச்சத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.

இந்தியாவில் கடந்த 1950ம் ஆண்டு ஜீனி குறியீடு 0.371 என இருந்தது. இந்த 75 ஆண்டுகளில் நாடு சரியான பாதையில் சென்றிருந்தால் இந்த குறியீடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொண்டே வந்திருக்க வேண்டும். ஆனால் 2023ம் ஆண்டின்படி இந்த குறியீடு 0.410 ஆக உயர்ந்திருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?:

பக்கத்தில் இருக்கும் சீனாவை விட இந்தியா மிக மோசமாக பின் தங்கி இருப்பதற்கு காரணம் இதுதான். பிரச்சனையை சரி செய்ய மக்கள் கைகளில் பண புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக கிராமபுறங்களில் இதை செய்ய வேண்டும். பணம் இருந்தால் மக்கள் பொருட்களை வாங்குவார்கள். பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும், இது வேலை வாய்ப்பை ஏற்படுத்தும். இதனால் பொருளாதாரம் உயர வாய்ப்பு இருக்கிறது.

100 நாட்கள் வேலை என்று சொல்லப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்டவை இந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதுதான்.

நீங்கள் சொல்லுங்கள் மக்களே.. உங்களுக்கும் உங்கள் முதலாளிக்கும் என்ன சம்பள வித்தியாசம்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+