இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ராகேஷ்குமார் சிங் பதாரியா நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.கே.எஸ். பதாரியா வரும் 30-ந் தேதி விமானப் படை தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
இந்திய விமானப் படையில் தற்போது துணை தளபதியாக இருப்பவர் ராகேஷ்குமார் சிங் (ஆர்.கே.எஸ்) பதாரியா. 1980-ம் ஆண்டு விமானப் படையில் சேவையாற்றி வருகிறார் பதாரியா.

2017-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தென்னிந்திய விமான படை பிரிவின் கட்டளை தளபதியாக பணியாற்றினார் பதாரியா. 36 ஆண்டுகால விமானப் படை சேவையில் வாயு சேனா பதக்கம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு விமானப் படை துணை தளபதியாக பதாரியா நியமிக்கப்படார். தற்போது விமானப் படை தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications