அசாத்தியமான நம்பிக்கை. ரேஷன், குடிநீருடன் திரளும் விவசாயிகள்.. அதிர்ச்சியில் டெல்லி போலீஸ்
டெல்லி: பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்காய்டு கண்ணீர் மல்க விடுத்த வேண்டுகோளுக்கு பிறகு டெல்லியின் காசிப்பூர் எல்லையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மிகவும் நம்பிக்கையுடனும், என்ன நடந்தாலும் ஒரு கைபார்க்காமல் போகக்கூடாது என்று விவசாயிகள் போராட்ட களத்திற்கு வந்திருப்பது அவர்களின் பேச்சில் தெரிந்தது.
வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்துவது என உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் மகாபஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி பல்லாயிரம் விவசாயிகள் காசிப்பூர் பாராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களை கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் காசிபூர் போராட்ட களத்திற்கு டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் ரேஷன் மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வந்து வழங்கியதுடன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மூன்று நண்பர்களுடன் டெல்லி-உ.பி. எல்லைக்கு போராட காசிப்பூரைச் சேர்ந்த சுபோத் குமார் என்ற விவசாயி, வழியில் டார்ப் மற்றும் கம்பிகளை வாங்கி டெல்லி எல்லையில் உள்ள ஃப்ளைஓவர் அருகே கூடாரம் அமைத்தார். இதுபற்றி அவர் கூறும் போது, "நாங்கள் இங்கே தங்க இருக்கிறோம். எனது மனைவியும் குழந்தைகளும் இப்போது விவசாயத்தை கவனித்து வருகின்றனர்.

அரிசி
டிவியில் ராகேஷ் டிக்காய்டு அழுவதைக் கண்டதும் என் மனைவி அழுதாள். காவல்துறையினரால் டிக்காய்டை கைது செய்ய முடியாது, அவர் எந்த தவறும் செய்யவில்லை. என்னிடம் சில காய்கறிகளும் அரிசியும் உள்ளன... நான் அதை இங்கு சமைத்து விவசாயிகளுக்கு தானம் செய்வேன். சாலைகளை சுத்தம் செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு சேவை செய்வேன்" என்றார்.

எல்லோருக்கு சமைப்பேன்
காசிப்பூர் எல்லையில் போராடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால். , பி.கே.யு மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்.எல்.டி) அமைப்பினரும், விவசாயிகளுக்கு தண்ணீர் மற்றும் உணவை அனுப்பி வைத்து வருகிறார்கள். என்.எச் -24 தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டல் ஒன்றை நடத்தி வரும் பி.கே.யுவின் உறுப்பினர் தேஷ்பால் சிங், "முன்னதாக, நாங்கள் 1,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு சமைத்தோம். இப்போது, 3,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். எனது குடும்ப உறுப்பினர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். எல்லோரும் எங்களுக்கு ரேஷன் தருகிறார்கள், மேலும் உணவு தயாரிக்க ஷாம்லியில் இருந்து மேலும் இரண்டு சமையல்காரர்களை அழைத்தோம் வந்துள்ளார்கள். ஒவ்வொரு வாகனத்திலும் 5,000 நீர் கேன்களுடன் தனது சகோதரர்கள் பாக்பத் மற்றும் ஷாம்லியில் இருந்து தினமும் ஐந்து டிராக்டர்களை அனுப்புகிறார்கள். "இங்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. டெல்லி அரசாங்கம் தண்ணீர் கொடுத்து உதவுகிறது, ஆனால் இப்போது எங்களுடன் அதிகமானோர் உள்ளார்கள் அவர்களுக்கு தண்ணீர் தேவை. என்றார் தேஷ்பால் சிங்.

சாலைக்கு சீல்
இதனிடயே ஆர்.எல்.டி விவசாய அமைப்பினர், முசாபர்நகர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் விவசாயிகளுக்க காய்கறிகளை அனுப்பிவருகிறார்கள்.'
டெல்லி காவல்துறையும் உ.பி. போலீசாரும் எல்லைக்குச் செல்லும் கிட்டத்தட்ட நான்கு வழித்தடங்களுக்கு சீல் வைத்து விட்டது. இதனால் விவசாயிகள் அம்ரோஹா-காஜியாபாத் சாலை அல்லது காசியாபாத்தில் உள்ள மோகன் நகர் வழியாக போராட்ட களத்திற்கு வந்து உணவு, தண்ணீரை தருகிறார்கள். வரும் வழியில் மூன்று அடுக்கு தடுப்புகள் உள்ளது. அதையும் தாண்டித்தான் விவசாயிகள் வருகிறார்கள்.

தடுக்க முடியாது
சனிக்கிழமை பிற்பகலுக்குள், மேம்பாலத்தை ஒட்டிய சாலைகள் விவசாயிகள் மற்றும் கூடாரங்களால் நிரம்பியிருந்தன. விவசாய சங்க தலைவர் டிக்கைட்டுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் எல்லைக்கு அழைத்துள்ளதாக தெரிவித்தனர். "டிக்கைட் சஹாப் மீண்டும் அழுவதை நாங்கள் விரும்பவில்லை. போலீசார் தொடர்ந்து எங்களைத் துன்புறுத்துவார்கள்; அவர்கள் கிட்டத்தட்ட எல்லா வழிகளையும் தடுத்துள்ளனர், ஆனால் ஒரு வருடம் இங்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தயாராக இருக்கும் விவசாயிகளை அவர்களால் தடுக்க முடியாது. எனது நண்பர்களிடம் வந்து போராட்டத்தில் சேர சொன்னேன். எங்கள் பண்ணைகளை கவனித்துக்கொள்வதற்காக வாராந்திர பயணங்களை மேற்கொள்வோம், அல்லது எங்கள் மனைவிகளும் குழந்தைகளும் அங்கேயே இருப்பார்கள். இப்போதைக்கு, இங்கு போராட எங்களுக்கு அதிகமான மக்கள் தேவை "என்று ஷாம்லியைச் சேர்ந்த விவசாயி ராகேஷ் கௌதம் கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications