சினிமா பாணியில் சுட்டுக்கொலை.. கர்னி சேனா தலைவர் கொலைக்கு பொறுப்பேற்ற ரோகித் கோத்ரா.. யார் தெரியுமா?
ஜெய்பூர்: ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு ராஜஸ்தானை சேர்ந்த ரோகித் கோத்ரா பொறுப்பேற்றுள்ளார். அவர் யார்? அவரது பின்னணி என்ன? என்பனவற்றை இங்கே காணலாம்.
ராஜஸ்தானில் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் சுக்தேவ் சிங் சோகமெடி. தீவிர வலது சாரி அமைப்பாக ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் உள்ள ஷியாம் நகரில் சுக்தேவ் சிங்கின் வீடு உள்ளது. இவருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சுக்தேவ் சிங் வழக்கம் போல தனது வீட்டில் இருந்தார். அப்போது திடீரென அவரது வீட்டை நோக்கி பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து சுக்தேவ் சிங் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், சுக்தேவ் சிங் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கு பொறுப்பேற்பு: வலது சாரி அமைப்பை சேர்ந்த சுக்தேவ் சிங் பட்ட பகலில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுக்தேவ் சிங் துப்பாக்கியால் சுடப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது யார் என்பது குறித்து போலீசார் ஒருபுறம் விசாரணை நடத்தி வர, இந்த சம்பவத்திற்கு பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய கேங்ஸ்டர் அமைப்பான லாரன்ஸ் பிஷ்னோய் குழுவை சேர்ந்த ரோகித் கோத்ரா என்ற ரவுடி என்று தெரியவந்துள்ளது.
யார் இவர்?: மேலும், கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கொகாமுடி தலைவர் கொலைக்கு ரோகித் கோத்ரா பொறுப்பேற்றுள்ளார். சுக்தேவ் சிங் கொலை செய்யப்பட்ட சில மணி நேரத்தில் தனது பேஸ்புக்கில் இந்த கொலைக்கு பொறுப்பேற்பதாக ராஜஸ்தானை சேர்ந்த ரோகித் கோத்ரா பதிவு செய்து இருந்தார். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலை தொடர்பான வீடியோ வெளியாகி பதைபதைக்க வைத்தது.
நெஞ்சை உறைய வைக்கும் வகையில், சினிமா பாணியில் பட்ட பகலில் நடந்த இந்த கொலைக்கு பொறுப்பேற்ற ரோகித் கோத்ரா யார் என்ற விவரங்களை பார்க்கலாம். ராஜஸ்தான் மாநிலம் பைக்னர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோகித் கோத்ரா.. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ரோகித் கோத்ரா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிழல் உலக வேலைகளில் ஈடுபடுபவராக அறியப்படுவர்.
நான் தான் செய்தேன்: ரோகித் கோத்ராவுக்கு எதிராக 32 க்கும் மேற்பட்ட தீவிர குற்றங்கள் நிலுவையில் உள்ளன. மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்ட ரோகித் கோத்ரா, ராஜஸ்தானில் பல தொழில் அதிபர்களிடம் ரூ.5 கோடி முதல் 17 கோடி வரை பணம் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட கேங்ஸ்டர் ராஜு தேத் கொலைக்கு ரோகித் கோத்ராதான் திட்டம் வகுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டுள்ளது. இந்தக் கொலையை தானே நடத்தியதாக ரோகித் கோத்ராவே தனது பேஸ்புக் பதிவில் அறிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications