திடீரென மசூதிக்கு சென்ற ஆர்எஸ்எஸ் மோகன் பாகவத்.. வரவேற்ற இஸ்லாமியர்கள்.. டெல்லியில் என்ன நடந்தது?
டெல்லி: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் உள்ள ஒரு மசூதிக்கு வருகை தந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அங்கு பல்வேறு முஸ்லிம் தலைவர்களை மோகன் பாகவத் சந்தித்ததாகவும், பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மசூதி விவகாரம், ஹிஜாப் பிரச்சினை என்பன உள்ளிட்ட பல விஷயங்களில் இந்து - முஸ்லிம் மதத்தினர் இடையே ஒருவிதமான இறுக்கமான சூழல் நிலவி வரும் நிலையில், மோகன் பாகவத்தின் இந்த சந்திப்பு முககியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஞானவாபி மசூதி சர்ச்சை
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாகவும், அங்கு தங்களை வழிபட அனுமதிக்க வேண்டும் எனவும் இந்து பெண்கள் சிலர் நீதிமன்றத்தை நாடினர். இந்த விவகாரம் இஸ்லாமியர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சிவலிங்கம் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என இந்து அமைப்பினர் சிலர் வலியுறுத்தி வந்தனர்.

மோகன் பாகவத் கருத்தால் அமைதி
அந்த சமயத்தில்தான், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்தார். அதாவது, ஞானவாபி மசூதி சர்ச்சை இன்றைக்கு ஏற்பட்டது அல்ல என்றும், அதற்கு இப்போது இருக்கும் முஸ்லிம்களோ, இந்துக்களோ காரணம் கிடையாது எனவும் அவர் கூறினார். மேலும், நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சிவலிங்கம் இருக்கிறதா என தேடி புதிய புதிய சர்ச்சைகளை உருவாக்க தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

மோகன் பாகவத்துக்கு அழைப்பு
மோகன் பாவத்தின் இந்தக் கருத்தை முஸ்லிம் மக்களும், மதத் தலைவர்களும் வெகுவாக பாராட்டினர். மேலும், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் சில முஸ்லிம் மதத் தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதன்பேரில், சில முக்கிய முஸ்லிம் மதத் தலைவர்களை மோகன் பாகவத் சந்தித்து வருகிறார். இதில் பல முக்கிய பிரச்சினைகளை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி மசூதிக்கு வருகை
அந்த வகையில், டெல்லியில் உள்ள ஒரு மசூதிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று வருகை தந்தார். பின்னர், அங்கு அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை மதகுரு உமர் அகமத் இலியாஸியை அவர் சந்தித்து பேசினார். முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, டெல்லி முன்னாள் ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர். சுமார் ஒரு மணிநேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. பத்திரிகையாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கிடைக்கவில்லை.

என்ன பேசினார்கள்?
இந்நிலையில், கூட்டம் முடிந்து வெளியே வந்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டில் நிலவி வரும் மதநல்லிணக்கமற்ற சூழல் குறித்து மிகவும் கவலைப்படுவதாக மோகன் பாகவத் கூறினார். மேலும், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது இரண்டு முக்கியமான பிரச்சினையை மோகன் பாகவத் முன்வைத்தார். அதில் முதலாவது பசுவதை. பசுவதை விவகாரம் இந்துக்களை மிகவும் புண்படுத்துவதாக அவர் கூறினார். அதற்கு நாங்கள், நாடு முழுவதும் பசுவதை தடை செய்யப்பட்டிருப்பதாகவும், எந்த முஸ்லிமும் அதை மீறுவதில்லை என்றும் கூறினோம்.

புண்படுத்தும்'கஃபீர்'
பின்னர், இந்துக்களை 'கஃபீர்' என சில முஸ்லிம்கள் கூறுவதை நிறுத்த வேண்டும் என மோகன் பாகவத் வலியுறுத்தினார். இதற்கு நாங்கள் தெளிவாக பதிலளித்தோம். அதாவது, 'கஃபீர்' என்பது அரபிக் மொழியில் 'இஸ்லாத்தில் நம்பிக்கை இல்லாதோர்' என அர்த்தம். ஆனால் இப்போது அது ஏதோ தவறான வார்த்தையாக பார்க்கப்படுகிறது. இந்துக்கள் மனதை புண்படுத்தினால் இனி அந்த வார்த்தை பிரயோகத்தை நிறுத்துவதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை" என நாங்கள் தெரிவித்தோம்.
அதேபோல, சில வலதுசாரி அமைப்பினர் முஸ்லிம்களை ஜிகாதி என்றும், பாகிஸ்தானி எனவும் கூறுவதை பற்றி கவலை தெரிவித்தோம். அதற்கு பதிலளித்த மோகன் பாகவத், "முஸ்லிம்களும் இந்தியர்கள்தான். இனி இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட மாட்டாது" என உறுதியளித்தார். இவ்வாறு எஸ்.ஒய். குரேஷி செய்தியாளர்களிடம் கூறினார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications