ஆர்எஸ்எஸ்-இடம் “சரண்டர்” ஆன பாஜக.. 3 மாநிலங்களின் புதிய முதலமைச்சர்கள்.. ஒரே தொடர்பு என்ன தெரியுமா?
டெல்லி: 3 மாநிலங்களில் முதலமைச்சர்களாக பாஜக அறிவித்து உள்ள 3 பேருக்கும் உள்ள ஒரே தொடர்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்பாக உள்ளது. இந்த மூன்று பேர் யார்? தீவிர ஆர்.எஸ்.எஸ். அபிமானிகளை முதலமைச்சராக பாஜக தேர்வு செய்ததன் பின்னணி என்ன என்று அலசுவோம்.
பாஜக வெற்றிபெற்ற 3 மாநிலங்களில் நீண்ட இழுபறிக்கு பிறகு முதலமைச்சர்கள் யார் என்று பாஜக தலைமை அறிவித்து உள்ளது. பஜன்லால் சர்மா ராஜஸ்தானின் முதலமைச்சராகவும், மோகன் யாதவ் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகவும், விஷ்ணு தேவ் சாய் சத்தீஸ்கரின் முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் 3 பேருமே முதலமைச்சர் ஆவார்கள் என்று அவர்களுக்கு கூட தெரிந்து இருக்காது. யாருமே இவர்களை பற்றி பேசவில்லை. ஸ்டார் வேட்பாளர்கள் பட்டியலில் கூட இல்லாமல் இருந்தனர்.

தற்போது 3 பேரும் முதல் முறை முதலமைச்சர்களாக அறிவிக்கப்பட உள்ளார்கள். இந்த அறிவிப்பின் மூலம் பாஜக தனது உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் நிலவிய கணிப்புகளையும் தகர்க்கும் வகையில் அமைந்து உள்ளது. விரைவில் மூவரும் முதல்முறையாக முதலமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர். இவர்களில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர், மத்திய பிரதேச முதலமைச்சர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC) சேர்ந்தவர், ராஜஸ்தான் முதலமைச்சர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர். வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்கள் மூவருக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உள்ளது.
அது பாஜக என்று மட்டும் நினைத்துவிடார்கள். அதையும் தாண்டி பாஜகவின் சித்தாந்த அமைப்பான ராஷ்ட்ரிய சுயம்சேவக் (ஆர்.எஸ்.எஸ்) இயக்கத்தால் வளர்க்கப்பட்டவர்கள் இவர்கள். மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவராவார். மோகன் யாதவ் மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து, ஆர்.எஸ்.எஸ்.-ன் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாநிலத்திலுள்ள அமைப்பின் தொடர்கள் இதனை வரவேற்று கொண்டாடினர். மோகன் யாதவ் ஏபிவிபியின் தேசிய செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்.
அதேபோன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய்க்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.. அவர் சத்தீஸ்கரின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, அம்மாநில ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றார். ஆர்.எஸ்.எஸ். மீதான அவரது கருத்தியல் ஈடுபாடு மிகவும் தீவிரமானது என்று அம்மாநில மக்கள் கூறுகிறார்கள். சத்தீஸ்கரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அங்கமாகவே சாய் பார்க்கப்படுகிறது.
சாய் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய தனது பழங்குடியின மக்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றும் கர் வாப்ஸி திட்டத்தை கையில் எடுத்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைமையின் நம்பிக்கையை பெற்றவர். மதமாற்றத்தைத் தடுக்க, சத்தீஸ்கரில் மதமாற்ற தடை சட்டத்தையும் ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது. ஆனால் பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ராமன் சிங் அரசு வளர்ச்சியை மட்டுமே தேர்தல் உத்தியாகக் கருதி அந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. எனவே அவர் இம்முறை ஓரம்கட்டப்பட்டு உள்ளார்.
அதேபோன்று ராஜஸ்தான் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு உள்ள முதல் முறை எம்.எல்.ஏவான பஜன்லால் சர்மாவுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் வலுவான தொடர்பு உள்ளது. அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏவிபிவியின் முக்கிய தலைவராக இருந்தவர். அதன் மூலம் கிடைத்த பிரபல்யத்தால் பாஜகவில் எம்.எல்.ஏ. சீட் அவருக்கு கிடைத்தது. ஓபிஎஸிக்கு எதிரான கட்சி பாஜக என்ற ராகுல் காந்தியின் பிரச்சாரத்தை முறியடிக்க ஆர்.எஸ்.எஸ். கொள்கைவாதியான யாதவை முதலமைச்சராக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். சொன்னதை கேட்டு தட்டாமல் அதை செய்திருக்கிறது பாஜக.
கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் இடையே லேசான உரசல்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் முனைப்புடன் செயலாற்றி வரும் பாஜக தலைமை, 3 மாநில தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் சரணாகதி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications