கதை முடிந்துவிட்டது.. பாஜகவை ஆர்எஸ்எஸ்ஸே கைவிட்டுவிட்டது.. நிலவரத்தை போட்டுடைத்த மாயாவதி!
ஆர்எஸ்எஸ் அமைப்பே பாஜகவை கைவிட்டுவிட்டதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பே பாஜகவை கைவிட்டுவிட்டதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தலின்படி பாஜக கட்சி சில முக்கிய விஷயங்களால் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறது. அதில் முதல் விஷயம் ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் பலர் பாஜகவிற்காக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஆர்எஸ்எஸ் பாஜக உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வருகிறது. தற்போது இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.
"மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
மாயாவதி பேட்டி
மாயாவதி தனது பேட்டியில், இப்போதெல்லாம் வேட்பாளர்கள் கோவிலுக்கு செல்வது பெரிய பேஷன் ஆகிவிட்டது. தேர்தல் வந்துவிட்டால் இவர்கள் இப்படித்தான் செய்வார்கள். இதை தேர்தல் ஆணையம் முதலில் தடை செய்ய வேண்டும். இது விதிக்கு முரணானது.
என்ன சொன்னார்
பிரதமர் மோடி மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. அவர் தோல்வி அடைவது உறுதியாகிவிட்டது. மோடி தோற்க போகிறார் என்பது பாஜகவிற்கே தெரிந்துவிட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் மோடி தோற்க போவது தெரிந்துவிட்டது.
மோடி பேட்டி
அதனால்தான் ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் யாரும் பாஜகவிற்காக வேலை பார்க்கவில்லை. எப்போதும் தேர்தல் பார்க்கும் ஆர்எஸ்எஸ் இந்த முறை அப்படி செய்யவில்லை. ஆர்எஸ்எஸ் பாஜகவை கைவிட்டுவிட்டது. தேர்தல் முடிவைத்தான் இது காட்டுகிறது.
எப்படி இருக்கும்
மோடி இதனால் அச்சத்திலும், வருத்தத்திலும் இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் முடிவுகள் தெரிந்துவிடும். ஒரு பிரதமர் என்பவர் இந்திய இறையாண்மையை மதிக்க வேண்டும். மோடி அதில் எப்போதோ தவறிவிட்டார், என்று மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.