வளைகுடா போரால்.. வரலாறு காணாத அளவில் சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு! மொத்தமும் போச்சு
டெல்லி: வளைகுடா போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்திருக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக, இந்திய ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ.92.16 என சரிவை சந்தித்திருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரிக்கும் வாய்ப்பு, ஏற்கனவே விரிவடைந்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவை இந்தியப் பொருளாதாரத்துக்கு அழுத்தம் கொடுத்து, ரூபாயின் மதிப்பை வெகுவாகப் பாதித்துள்ளன.

உலகளாவிய சந்தைகளை உலுக்கிய ஈரான் நெருக்கடி, ரிசர்வ் வங்கியின் ஆதரவு இருந்தபோதிலும், இந்தியாவின் நாணயத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகம் மற்றும் சுங்கவரி தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் இந்தியாவிலிருந்து மிகப்பெரிய நிதி வெளியேற்றம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. கடந்த ஆண்டு ரூபாய் "ஆசியாவின் மோசமான செயல்திறன் கொண்ட நாணயம்" என்ற பெயரைப் பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications