"உக்ரைனில் உள்ள இந்தியர்களை.. பாதுகாப்பாக வெளியேற்ற இதை செய்யலாம்.." ரஷ்யா முக்கிய தகவல்
டெல்லி: உக்ரைன் நாட்டில் கொல்லப்பட்ட இந்திய மாணவரின் மரணம் குறித்து ரஷ்யா சார்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் அலிபோவ் தெரிவித்துள்ளார்
Recommended Video
உக்ரைன் நாட்டில் ஒரு வாரத்திற்கும் மேலாகப் போர் தொடர்ந்து நீட்டித்து வருகின்றது. இந்நிலையில், சமீபத்தில் கார்கிவ் நகரில் இருந்த இந்திய மாணவர் ஒருவர் ரஷ்ய ராணுவம் சுட்டதில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் அலிபோவ், "கணிசமான எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் இருக்கும் இந்தியர்கள் வெளியேறும் வகையில் ராணுவ நடவடிக்கை இல்லாத சிறப்பு வழித்தடத்தை (humanitarian corridor) உருவாக்குவது தொடர்பாகப் பரிசீலனை செய்து வருகிறது. மேலும் கார்கிவில் இந்திய மருத்துவ மாணவர் மரணம் குறித்து ரஷ்யா சார்பில் தீவிர விசாரணை நடத்தப்படும்,

உக்ரைன் விவகாரத்தில் நடுநிலையான நிலைப்பாடு எடுத்ததற்கு இந்தியாவுக்கு நன்றி கூறுகிறோம். இந்த நெருக்கடியின் ஆழத்தையும் அதன் சிக்கலான தன்மையையும் இந்தியா புரிந்து கொண்டுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு தொடரும் என நம்புகிறோம்.
மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை அறிவித்து வரும் போதிலும் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. இந்தியாவுடன் தொடர்ந்து வணிகம் செய்யவே விரும்புகிறோம். இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். S400 உள்ளிட்ட இந்தியாவுடன் நாங்கல் மேற்கொண்டுள்ள ராணுவத் தளவாடங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் இதனால் பாதிக்கப்படாது" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications