யார்னு பாருங்க! கூலாக பேப்பர் படிக்கும் ஜக்கி வாசுதேவ்.. மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு முன்னேற்றம்
டெல்லி: மூளை பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜக்கி வாசுதேவ் வேகமாக குணமடைந்து வருகிறார். இந்நிலையில், அவர் செய்தித்தாள் படிப்பது போன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது அவர் வேகமாக குணமடைந்து வருகிறார்.

அண்மைக் காலமாக ஜக்கி வாசுதேவுக்கு ஒற்றைத் தலைவலி இருந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது மூளையில், ரத்தகசிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ஜக்கி வாசுதேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வருகிறார். ஜக்கி வாசுதேவ் நலமுடன் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா அறக்கட்டளை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவின் சமூக வலைதள பக்கத்தில் மற்றொரு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் சத்குரு ஜக்கி வாசுதேவ், செய்தித்தாள் வாசித்து வருகிறார். இந்த 19 விநாடி கொண்ட வீடியோவை #SpeedyRecovery என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்பட்டுள்ளது.
#Sadhguru #SpeedyRecovery pic.twitter.com/rTiyhYPiJM
— Sadhguru (@SadhguruJV) March 25, 2024
முன்னதாக, சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல் நிலை பற்றி ஈஷா அறக்கட்டளையினர் வெளியிட்ட அறிக்கையில், "சில நாட்களுக்கு முன்னர் சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல்நிலையில், முன்னேற்றம் எதிர்பார்த்த விட சிறப்பாக உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications