இப்போ மட்டுமில்லை.. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 2009இல்.. இதே ஒடிசாவில் கோர விபத்தில் சிக்கியது தெரியுமா
டெல்லி: இன்றைய தினம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் தடம்புரண்டு மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த 2009ஆம் ஆண்டிலும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இதே ஒடிசாவில் விபத்தில் சிக்கியுள்ளது.
இந்தியாவில் நாட்டில் விமானத்தில் பயணிப்போரைக் காட்டிலும் அதிகப்படியானோர் ரயில்களில் பயணிக்கவே விரும்புவார்கள். கட்டணம் குறைவு, டாய்லெட் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் பலரும் ரயில்களில் பணிப்பதையே விரும்புவார்கள்.

இருப்பினும், இந்தியாவில் ரயில் போக்குவரத்தில் சிக்னல் உள்ளிட்டவை இன்னும் பழங்கால தொழில்நுட்பத்தையே பயன்படுத்துவதாக விமர்சனம் இருந்து கொண்டே இருக்கிறது. இதைச் சரி செய்யவும் மத்திய மாநில, அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே இன்றைய தினம் கோரமண்டல் ரயில் தடம் புரண்டிருந்த நிலையில், மற்றொரு ரயிலும் தடம் புரண்டது தெரிய வந்துள்ளது. அதாவது, கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அதன் மீது யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் மோதியுள்ளது. இது மட்டுமின்றி அங்கே லூப் தடத்தில் இருந்த மற்றொரு சரக்கு ரயிலும் மோதியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இதே ஒடிசாவில் 2009ஆம் ஆண்டிலும் இதேபோன்ற மோசமான விபத்தில் சிக்கியிருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு பிப். மாதம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயிலின் 13 பெட்டிகள் ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் தடம் புரண்டது. அப்போது இந்த விபத்தில் 16 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 161 பேர் காயமடைந்தனர்.
ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையம் வழியாக அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த போது அப்போது பெட்டிகள் தடம் புரண்டன. ரயிலின் என்ஜின் முதலில் தடம் புரண்ட நிலையில், அடுத்தடுத்து வந்த மற்ற பெட்டிகளும் தடம் புரண்டுள்ளன. அன்றைய தினமும் இரவு 8 மணியளவில் தான் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

அப்போது விபத்து நடந்த இடத்தை சுற்றிலும் 200 முதல் 300 மீட்டர் தொலைவில் ரயில் பெட்டிகளில் பாகங்கள் சிதறிக் கிடந்தன. இது அப்போது ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. இந்த ரயில் விபத்து குறித்து விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.
கோரமண்டல் ரயில் ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்குச் செல்லும் போது அந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் அதிவேகமாகச் சென்ற நிலையில், மற்றொரு தண்டவாளத்திற்கு மாறும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று அதே ஒடிசாவில் கோரமண்டல் ரயில் தடம் புரண்டுள்ளது. இன்று பாலேஸ்வர் அருகே ரயில் தடம் புரண்டுள்ளது. இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்த விபத்திற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications