இந்தியாவிலேயே முதல் தடுப்பூசியை போட்டு கொண்டவர்... டெல்லி எய்ம்ஸ் துப்புரவு தொழிலாளி!
டெல்லி: இந்தியாவில் முதல் தடுப்பூசியை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை துப்புரவு தொழிலாளி மனிஷ்குமார் பெற்றுள்ளார்.
Recommended Video

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக இருக்கும் அவர் முதல் தடுப்பூசியை பெற்றார்.
தடுப்பூசியைச் சுற்றியுள்ள அச்சங்களை அகற்ற விரும்பியதால், தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக மனிஷ்குமார் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி வந்தாச்சு
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக சுகாதார, மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

நாட்டின் முதல் நபர் யார்?
தலைநகர் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அந்த மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளி மனிஷ்குமாருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது.

துப்புரவு தொழிலாளிக்கு கிடைத்த பெருமை
இந்தியாவில் முதல் தடுப்பூசியை பெற்ற முதல் நபர் என்ற பெருமை துப்புரவு தொழிலாளி மனிஷ்குமாருக்கு கிடைத்துள்ளது. அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் நீண்ட காலமாக துப்புரவு தொழிலாளியாக இருந்து வருகிறார்.

நன்றாக இருக்கிறேன்
தடுப்பூசியை பெற்ற மனிஷ்குமார் கூறியதாவது:- நான் ஒரு பயனாளி என்று எனக்குத் தெரியும், தடுப்பூசியைச் சுற்றியுள்ள அச்சங்களை அகற்ற விரும்பியதால் என்னை தடுப்பூசி பெறும் முதல் பெறுநராக மாற்றும்படி எனது மேற்பார்வையாளரிடம் சொன்னேன். எனக்கு நிறைய அச்சங்கள் உள்ளன, ஆனால் நான் நன்றாக இருக்கிறேன்.

குடும்பத்தினர் பயந்தனர்
பல ஆண்டுகளாக எய்ம்ஸில் பணியாற்றி வருகிறேன்.தடுப்பூசிக்கு பயப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. என் குடும்பமும் பயந்திருந்தது, ஆனால் நான் அவர்களிடம் அதை எடுத்துக்கொள்கிறேன், எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறினேன் என்று மனிஷ்குமார் தெரித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியாவும் அங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications