இந்தியாவிலேயே முதல் தடுப்பூசியை போட்டு கொண்டவர்... டெல்லி எய்ம்ஸ் துப்புரவு தொழிலாளி!
டெல்லி: இந்தியாவில் முதல் தடுப்பூசியை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை துப்புரவு தொழிலாளி மனிஷ்குமார் பெற்றுள்ளார்.
Recommended Video

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக இருக்கும் அவர் முதல் தடுப்பூசியை பெற்றார்.
தடுப்பூசியைச் சுற்றியுள்ள அச்சங்களை அகற்ற விரும்பியதால், தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக மனிஷ்குமார் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி வந்தாச்சு
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக சுகாதார, மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

நாட்டின் முதல் நபர் யார்?
தலைநகர் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அந்த மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளி மனிஷ்குமாருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது.

துப்புரவு தொழிலாளிக்கு கிடைத்த பெருமை
இந்தியாவில் முதல் தடுப்பூசியை பெற்ற முதல் நபர் என்ற பெருமை துப்புரவு தொழிலாளி மனிஷ்குமாருக்கு கிடைத்துள்ளது. அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் நீண்ட காலமாக துப்புரவு தொழிலாளியாக இருந்து வருகிறார்.

நன்றாக இருக்கிறேன்
தடுப்பூசியை பெற்ற மனிஷ்குமார் கூறியதாவது:- நான் ஒரு பயனாளி என்று எனக்குத் தெரியும், தடுப்பூசியைச் சுற்றியுள்ள அச்சங்களை அகற்ற விரும்பியதால் என்னை தடுப்பூசி பெறும் முதல் பெறுநராக மாற்றும்படி எனது மேற்பார்வையாளரிடம் சொன்னேன். எனக்கு நிறைய அச்சங்கள் உள்ளன, ஆனால் நான் நன்றாக இருக்கிறேன்.

குடும்பத்தினர் பயந்தனர்
பல ஆண்டுகளாக எய்ம்ஸில் பணியாற்றி வருகிறேன்.தடுப்பூசிக்கு பயப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. என் குடும்பமும் பயந்திருந்தது, ஆனால் நான் அவர்களிடம் அதை எடுத்துக்கொள்கிறேன், எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறினேன் என்று மனிஷ்குமார் தெரித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியாவும் அங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications