என்னோட கருத்தையும் கேளுங்க.. என்ட்ரி கொடுத்த சசிகலா.. உச்சநீதிமன்றத்தில் அதிரடியாக கேவியட் மனு தாக்கல்
அதிமுக பொதுச்செயலாளர் பதவி வழக்கில் சசிகலா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்
டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கில் இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தால் தமது தரப்பு கருத்தையும் கேட்க கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் சசிகலா முதல்வராக முயற்சித்தார். ஆனால் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கி சசிகலா சிறை தண்டனையை அனுபவிக்க நேரிட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா.

அப்போது அதிமுக பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும் சசிகலா நியமித்துவிட்டு சிறைக்கு சென்றார். இந்த கால கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு இணைந்து கொண்டது. இதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் அதிமுகவில் புதியதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ப்தவிகள் உருவாக்கப்பட்டன.

2017 செப்டம்பரில் தம்மை நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். ஆனால் சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மனுத் தாக்கல் செய்தனர். நீண்டகாலம் நிலுவையில் இருந்த நிலையில் சசிகலாவின் மனுவை உரிமையியல் நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். சசிகலாவின் இந்த மனுவை நிராகரிக்க கோரி இபிஎஸ் தரப்பில் செம்மலை ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த சசிகலாவுக்கு உத்தரவிட வேண்டும்; அப்படி கட்டணம் செலுத்தாவிட்டால் சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதிமுகவின் அமைப்பு செயலாளர் என்ற அடிப்படையில் செம்மலை மனுத் தாக்கல் செய்தார். ஆனால் செம்மலையின் இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் இபிஎஸ் தரப்பு தமது மனு தள்ளுபடி செயப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், பொதுச்செயலாளர் பதவி நீக்க வழக்கில் இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்; அப்படி மேல்முறையீடு செய்யும் போது தமது தரப்பு கருத்தையும் கேட்ட பின்னரே உத்தரவிட வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
பக்ரீத் பண்டிகை: பசு, கன்றுகள் வதைக்கு தடை.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதாக தமிழக அரசு விளக்கம் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications