"டோல்கேட் நடைமுறையில் மாற்றம்".. 2 மாதத்தில் அமலாகும் செயற்கைகோள் கட்டண முறை - நிதின் கட்காரி
டெல்லி: தற்போது சுங்கச்சாவடிகளில்(டோல்கேட்) கட்டணம் வசூலிக்கும் முறையை முற்றிலுமாக நீக்கிவிட்டு சேட்டிலைட் அடிப்படையில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கும் முறை இன்னும் 2 மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
நம் நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும்போது நாம் டோல்கேட்டுகளில் (சுங்கச்சாவடிகளில்) கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தொலைவுகளில் டோல்கேட்டுகள் அமைத்து இந்த கட்டணம் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு நீண்ட வரிசையில் நின்று வாகனங்கள் டோல்கேட்டுகளில் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இதனால் அதிக நேரம் வாகனங்கள் அணிவகுத்த நின்றன. அதோடு பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து பொதுமக்களின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் பாஸ்டேக்கை வாகனங்களில் ஒட்டியிருந்தால் அதனை டோல்கேட்டில் உள்ள சென்சார் ஸ்கேன் செய்து உரிய கட்டணத்தை பாஸ்டேக் ரீசார்ஜ் தொகையில் இருந்து எடுத்து கொள்ளும். இந்நிலையில் தான் தற்போது டோல்கேட்டில் கட்டணம் செலுத்தும் முறையை மாற்றம் செய்ய மத்திய சாலை போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவில் புதிய முறையை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இன்னும் 2 மாதத்தில் சேட்டிலைட் முறையில் டோல்கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி உறுதி செய்துள்ளார். அதாவது நேற்று சாலை போக்குவரத்து துறையில் டோல்கேட் தொடர்பான கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரி ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் தான் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, நம் நாட்டில் நடைமுறையில் உள்ள டோல்கேட் முறையை கைவிடும் நேரம் வந்துள்ளது. அதற்கு பதில் சேட்டிலைட் அடிப்படையிலான கட்டண முறையை அறிமுகப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டுகளில் செயற்கைக்கோள் அடிப்படையில் கட்டண முறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் அறிமுகப்படுத்த உள்ளது.
இது ஜிஎன்எஸ்எஸ் (GNSS)அல்லது Global Naviagation Satellite System முறை என அழைக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் தொலைவை செயற்கைகோள் கணக்கிடும். இந்த வாகனங்கள் டோல்கேட்டுகளில் செல்லும்போது அதற்கான கட்டணத்தை ஸ்கேனர் மூலம் எளிதாக செலுத்த முடியும். பணம் நேரடியாக வங்கி கணக்கில் இருந்து எடுத்து கொள்ளப்படும்.
தற்போது கர்நாடகாவில் உள்ளபெங்களூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை 275 மற்றும் ஹரியானாவில் .ள்ள பானிபட் - ஹிசார் தேசிய நெடுஞ்சாலை 709 ஆகியவற்றில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தி பார்க்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 2 மாதத்தில் டோல்கேட்டுகளில் செயற்கைகோள் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டு வரப்பட உள்ளது.
முதற்கட்டமாக தற்போது நடைமுறையில் உள்ள பாஸ்டேக் முறையுடன் இந்த செயற்கைகோள் அடிப்படையிலான கட்டண நடைமுறை கொண்டு வரப்படும். அதன்பிறகு சிறிது காலத்துக்கு பிறகு முழுவதுமாக செயற்கைகோள் அடிப்படையிலான கட்டண நடைமுறை கொண்டு வரப்படும்.
பாஸ்டேக் முறை நடைமுறையில் இருந்தாலும் கூட தற்போதும் வாகனங்கள் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது. அதேபோல் டோல்கேட்டில் ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் இந்த புதிய முறை அமலாகும்போது பணியாளர்கள் தேவை இன்னும் குறையும். அதுமட்டுமின்றி கார்கள் டோல்கேட்டுகளில் நிற்கும் நேரம் இன்னும் சரியும் '' என தெரிவித்துள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications