சவுதி இளவரசர் - பிரதமர் மோடி சந்திப்பில் கையெழுத்தான 8 முக்கிய ஒப்பந்தங்கள்.. முழு விவரம்!
டெல்லி: ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி துறை உள்பட 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியாவில் கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி 20 நாடுகளில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பிறகு தங்கள் நாட்டிற்கு திரும்பி சென்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் புறப்பட்டு சென்றார். அதேவேளையில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், இந்தியாவிலேயே தங்கினார்.

இன்று காலை பிரதமர் மோடியை முகம்மது பின் சல்மான் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்து பேசினேன். மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தையாக இருந்தது.
வரும் காலங்களில் இரு நாடுகளுக்கு இடையேயுமான வர்த்தக தொடர்புகள் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம். நமது வர்த்தக உறவுகளை ஆய்வு செய்தோம். கிரிட் கனெக்ட்டிவிட்டி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பாதுகாப்பு, செமி கண்டக்டர்ஸ் மற்றும் விநியோக சங்கிலி ஆகியவற்றில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மகத்தானதாக இருக்க வாய்ப்புள்ளது" என்றார்.
இந்தியா - சவுதி அரேபியா இடையே எரிசக்தி துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், "சவுதி அரேபியாவும் இந்தியாவும் எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிக்சதி செயல் திறன், ஹைட்ரஜன் எலட்ரிசிட்டி, மற்றும் பெட்ரோலிய இருப்புகளில் முதலீடுகள், ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்தக் கூட்டத்தில் பொருளாதர வழித்தடம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது" என்றார். சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் - பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு இருநாடுகளுக்கும் இடையேயான உறவை புதிய அத்தியாத்தித்திற்கு எடுத்து செல்லும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications