மருத்துவ காரணத்துக்காக ஜாமீன் வாங்கி.. என்ன செய்தீங்க? சவுக்கு சங்கரை லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்
சென்னை: ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்நிலையில், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.
மோசடி புகார்களின் கீழ் கடந்த மாதம் 13ம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் நீதிமன்றத்தை அணுகி ஜாமின் பெற்றிருந்தார்.

ஜாமினும் கிடைத்தது. ஆனால், ஜாமின் நிபந்தனைகளை அவர் மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சவுக்கு சங்கருக்கு சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் இருப்பதாக சொல்லித்தான் ஜாமின் பெறப்பட்டது. ஆனால், சிகிச்சையில் இருக்காமல். நிபந்தனையை முழுமையாக பின்பற்றவில்லை என்று நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
ஜாமினில் உள்ள தனக்கு, நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் சவுக்கு சங்கர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி திபங்க்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், ஒவ்வொரு வாரமும் சவுக்கு சங்கர் வழக்கு விசாரணைக்கு வருகிறதே என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். "இது என்ன புதிய வழக்கு? நாங்களும் பார்க்கிறோம் ஒவ்வொரு வாரமும் சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கு ஏதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கிறது" என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கேட்டதை அடுத்து, வழக்கு சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் விசாரணை தொடங்கியது.
சவுக்கு சங்கர் தொடர்பான ஜாமீன் நிபந்தனை தளர்வு கோரிய மனு மீதான விசாரணையின் போது, தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்கள் மருத்துவ அறிக்கைகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை, தனக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது என சவுக்கு சங்கர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அப்போது அதனை மறுத்த நீதிபதிகள், "மருத்துவர்கள் மீது இப்படியான குற்றச்சாட்டுகளை முன் வைக்காதீர்கள். மருத்துவர்களை பொருத்தவரை அவர்கள் ஒருவரை பரிசோதனை செய்து அதன் அடிப்படையில்தான் முடிவுகளை கூறுவார்கள்" என உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினார்கள். மட்டுமல்லாது, நிபந்தனைகளை மீறியுள்ளதை குறிப்பிட்ட நீதிமன்றம், ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications