மோசமான நிதி நிலை.. யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க எஸ்பிஐ வங்கி திட்டம்?
மும்பை: யெஸ் வங்கியின் 49 சதவீதம் பங்குகளை வாங்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுவது யெஸ் வங்கி. கடந்த 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த வங்கி. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

இந்த வங்கியின் வருவாய் கடந்த 2018ஆம் ஆண்டு ரூ 25,491 கோடியாக இருந்தது. இந்த நிலையில் இந்த வங்கி வாராக் கடன் பிரச்சினையில் சிக்கிவிட்டது. இதனால் இதன் நிதி நிலைமை மோசமடைந்துவிட்டது. வங்கிகளை நடத்துவதற்கே மூலதன முதலீடுகளை திரட்ட முடியாமல் போய்விட்டது.
இதையடுத்து யெஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி அந்த வங்கி நிர்வாகத்தை 30 நாட்களுக்கு எடுத்துக் கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மறுசீரமைப்பு மற்றும் மற்ற வங்கியுடன் இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார், யெஸ் வங்கியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க பாரத ஸ்டேட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் கூறுகையில் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். யெஸ் வங்கியில் ரூ 2,450 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி குழுவும் சட்ட ஆலோசகர்களும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள் என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications