ஜம்மு காஷ்மீரில் 35ஏ சட்டம் அடிப்படை உரிமைகளை பறித்தது! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குற்றச்சாட்டு
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 35ஏ சட்டம், அம்மாநிலத்தை பூர்வீகமாக கொள்ளாத ஆனால் அங்கு வசிக்கும் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை பறித்துள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு திடீரென நீக்குவதாக அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இருப்பினும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இப்படியாக இந்த சிறப்பு சட்டம் நீக்கப்பட்டு தற்போது 4 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் திங்கள் மற்றும் வெள்ளி தவிர மற்ற நாட்களில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில், நேற்று 11வது நாளாக விசாரணை நடைபெற்ற நிலையில், "ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 35ஏ சட்டம், அம்மாநிலத்தை பூர்வீகமாக கொள்ளாத ஆனால் அங்கு வசிக்கும் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை பறித்துள்ளது" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறியுள்ளார். மேலும், "சமவாய்ப்பு, மாநில அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு மற்றும் நிலம் வாங்குவதற்கான உரிமை போன்றவை அந்த மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு மட்டுமே இருந்தது.
மற்றவர்கள் இந்த விவகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். இந்திய அரசியலமைப்பு ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பை விட உயர்ந்த தளத்தில் உள்ள ஒரு ஆவணம் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். மாநிலத்தின் வேலைவாய்ப்பு அனைவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். அதேபோல இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 19வது பிரிவு நாட்டின் எந்தப் பகுதியிலும் வாழவும் குடியேறவும் உரிமையை அங்கீகரிக்கிறது. ஆனால் இவற்றை ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவான 35ஏ பறிக்கிறது" என்று கூறியுள்ளார்.
மத்திய அரசும் இந்த வழக்கில் இதே வாதத்தைதான் முன்வைத்திருக்கிறது. முதலீடுகள் வந்தால்தான் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பெறும். ஆனால் இந்த முதலீடுகளுக்கு சிறப்பு அந்தஸ்து சட்டம் இடையூறாக இருந்தது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications