அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கை 9 மாதத்தில் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதியை இந்துத்துவா கும்பல் இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் நாடு முழுவதும் பெரும் வன்முறை வெடித்ததில் 2,000 பேர் பலியாகினர்.

SC directs to deliver verdict within 9 months in Babri demolition case

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டது லக்னோ சிறப்பு நீதிமன்றம்.

இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், 9 மாதத்துக்குள் வழக்கை விசாரித்து முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என இன்று உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+